Posts

Featured Post

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு - 110 மையங்களில் 1617 எழுத வாசிக்க தெரியாதவர்கள் எழுதினர்.

Image
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு இன்று நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழிகாட்டுதலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி அறிவுரையின்படி இன்று நடைபெற்றது. இத்தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் 110 மையங்களில் 1617 எழுத வாசிக்க தெரியாதவர்கள் கற்போர்கள் ஆறு மாதங்கள் தன்னார்வலர்களால் பயிற்சி பெற்று இன்று தேர்வினை மிகச் சிறப்பாக எழுதினர்.  தூத்துக்குடி நகர்புற வட்டாரத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சாமுவேல் புரம் மற்றும் தஸ்நேவிஸ் மாதா தொடக்கப்பள்ளி இனிக்கோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வு மையத்தினை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தனலட்சுமி மேற்பார்வையாளர் பார்வ...

தூத்துக்குடியில் தேசிய லோக் அதாலத் மூலம் 3,400க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

Image
  தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 3,686 வழக்குகளுக்கு ₹16.23 கோடி இழப்பீடு மற்றும் தீர்வுத் தொகை வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற அமர்வுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தலைமை தாங்கினார், முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். வசந்தியுடன் இணைந்து தலைமை தாங்கினார். தேசிய லோக் அதாலத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் மொத்தம் 15 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 4,588 வழக்குகளில், 3,474 வழக்குகள் ரூ.11.32 கோடி இழப்பீட்டுடன் தீர்க்கப்பட்டன, மேலும் 212 செயல்படாத சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ₹4.90 கோடி தீர்வுடன் தீர்க்கப்பட்டன. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 தாலுகாக்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 5,209 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 4,096 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹15.32 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது....

நெல்லை சரகத்தில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் : டிஐஜி உத்தரவு.!

Image
  நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம் - 6 மாணவிகள் சஸ்பெண்ட்.!

Image
  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் போட்டுவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் வகுப்பறை பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தான் என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு ...

போல்டன்புரம் பொதுமக்கள் புகார்: கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது - மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் கழவுநீர் வழித்தடங்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக 36வது வாா்டுக்குட்பட்ட போல்டன்புரம் பகுதி பொதுமக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து போல்டன்புரம் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜபாண்டிக்கு உத்தரவிடப்பட்டது அதன் அடிப்படையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி சுகாதாரத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளர்களுடன் நேரில் சென்று அந்தப் பகுதியை பார்வையிட்ட போது கழிவு நீர் செல்லும் வழித்தடங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு மணல் தேங்கி அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது உடனடியாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மணல்களை அப்புறப்படுத்த களத்தில் இறங்கினார்கள். சுமார் 20 அடி நீளத்துக்கு கழிவுநீர் வழித்தடத்தில் 5 அடிக்கு மேல் தேங்கியிருந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது அந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.  அப்போது தொடர்ந்து இந்தப் பகுதி முழுவதும் கழ...

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்தநாள் விழா மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, கழக வளர்ச்சிப் பணி குறித்து வடக்கு மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் வரும் 16ம் தேதி செவ்வாய் கிழமை காலை  எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் எனது தலைமையில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி முன்னிலையில் நடைபெறுகிறது.  கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

"இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது" - தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில மாநாட்டில் திருமாவளவன் பேச்சு.!

Image
  இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது. இடதுசாரிகள் தெளிவாக, துணிவாக இருப்போம். இணைந்தே நிற்போம். வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந்து விடக்கூடாது. சோர்ந்து விடக்கூடாது என்று திருமாவளவன் எம்பி பேசினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 12வது மாநில மாநாடு, தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. மாநில செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் சங்கர் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச் செயலாளர் திபங்கர் பங்கேற்றார். மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசும் போது, பாஜ ஒவ்வொரு சமூகத்தையும், தனித்தனியாக, மதம் சார்ந்த முறையில் அணுகுகிறார்கள். அவர்கள் மதுரையில் நெசவாளர்களுக்காக போராடவில்லை. தொழில் வளத்தை கொண்டு வர போராட வில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடவில்லை. கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள், மக்க ளின் உணர்ச்சியை தூண்டி விட்டு ஒருங்கிணைக்க பார்க்கிறார்கள். ஓபிசி இட ஒதுக்கீடுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தினார்கள். ஓபிசி தலைவர்கள் பாஜ இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி, அந்த கட்சியை ஆதரிக்க கூடாது என்...