Posts

Featured Post

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ் கிளப் கோாிக்கை.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் வழிச்சாலையில் தூத்துக்குடி பிரஸ்கிளப் செயல்பட்டு வருகிறது. அதில் செய்தியாளா்கள் புகைப்படகாரா்கள் ஔிப்பதிவாளா்கள் பணியாற்றி வருகின்றனா் அதன் உள்பகுதியில் சிறுவா் சிறுமியா் மழலைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையமும் இருந்து வருகிறது. அதன் உட்புறப்பகுதி தாழ்வானதாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசு, மற்றும் பல நோய்களை உருவாக்கும் கிருமிகள் உற்பத்தியாகி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் இருந்து வருகிறது.  அதே போல் முன்பகுதியில் மாநகராட்சி சாா்பில் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் மாநகராட்சி சாா்பில் பேவா்பிளாக் பதித்து மக்கள் நலனில் பாதுகாத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திாிக்கைதுறையினருக்கும் தேவையான கோாிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்ட மேயா் ஜெகன் பொியசாமி விரைவாக இந்த கோாிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தாா். கௌரவ ஆலோசகா்கள...

கர்நாடகாவில் சொத்து தகராறில் பயங்கரம் : ஒரே குடும்பத்தில் 6 பேர் படுகொலை - அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கும்பல் வெறிச்செயல்.!

Image
  பெங்களூரு, மே.30- விஜயாப்புரா அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் அப்பு கவுடா. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவணசித்தப்பா. இவர்கள் 2 பேர் குடும்பத்தின ருக்கும் இடையே 10 ஏக்கர் நிலத்துக்காக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் இரு குடும்பத்தினரிடையேயும் சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தி தீர்த்து வைத்ததனர். பின்னர் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே, இதனை தீர்த்து வைக்க மீண்டும் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பஞ்சாயத்துக்கு வந்திருந்த ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினரிடம் அப்பு கவுடாவின் குடும்பத்தினர் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுசுவார்த்தை நடத்தினர். இருத ரப்பு பேச்சுசுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்புகவுட மற்றும் அவ ரது குடும்பத்தினரின் கோரிக்கையை ரேவணசித்தப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஏற் கவில்லை. அதுபோல...

ரோட்டில் கட்டுக்கட்டாக கிடந்த ரூ.5 லட்சம்... போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு!

Image
 திருப்பூர்: சாலையில்  கட்டு கட்டாக கிடந்த பணத்தை  கண்டெடுத்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு  காவல் துறையினர் பாராட்டு. திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.  ஆட்டோ ஓட்டி வரும்  இவர் வளர்மதி ஆட்டோ ஸ்டாண்டில் தனது வாகனத்தை நிறுத்தி பணி செய்து வருகிறார். இன்று காலை தனது உறவினர் பிரபு என்பவரை அழைத்துக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் செல்லும் பொழுது வளம் பாலம் பகுதியில் கீழே இருந்த பிங்க் நிற பையை எடுத்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து மதன் உடனடியாக திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம்  பணப்பையை ஒப்படைத்தார். பையினை சோதனை செய்து பார்த்தபோது 5,64,000 பணம் இருந்தது தெரிய வந்தது. அதே சமயம் ராஜஸ்தானை சேர்ந்த தானாராம் என்பவர் திருப்பூர் வளம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது கடையிலிருந்து வங்கியில் செலுத்த ஐந்து லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றபோது இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்து விட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்...

நாளை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Image
தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுதொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். 31-05-2026 மற்றும் 01-06-2026: ...

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும், நியாயவிலை கடையும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் முள்புதர்கள் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன.  மேலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகிலேயே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு, அவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு வரும் குழந்தைகளின் சுகாதாரத்திற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், புதர்கள் அதிகமாக இருப்பதால் விஷப்பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அங்கன்வாடி மையத்திற்கு வரும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.  மேலும் நியாய விலை கடைக்கு தினமும் வருகை தரும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் அளித்து, புதர்களை அகற்றி சுத்தம...

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்.

Image
  தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வரும் இவர், இப்போது தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார். 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பத...

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்.!

Image
  இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் அணியை சேர்ந்தவா்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் என்பவா் வீட்டிற்கு வந்து ஆட்டோவை உடைத்து அருவாளால் மிரட்டி "எங்கள் அண்ணனை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதைப் பற்றி புகாராக தெரிவிக்கப்பட்டது.  திமுகவின் சட்ட ஒழுங்கு பிரச்சனை இதோ ஆரம்பமாகிவிட்டது இனி மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இதை காவல்துறையினர் சரியாக கையாள வேண்டும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்று தர வேண்டும் இல்லை என்றால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்று இதற்கு ஒரு முடிவு எடுப்போம். சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது இல்லையேல் சட்டத்தை கையில் எடுக்கவும் காங்கிரஸ் கட்சி த...