Posts

Featured Post

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Image
  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்  வல்லநாடு ஆற்றுபடுகையில் நான்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் மாநகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது பைப் லைன் மற்றும் உறைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகை...

தவெக விஜய் ரீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற போல்பேட்டை பகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலக்கட்டம் அதற்கு முன்பு இருந்து எடப்பாடி எல்லா தொழிலையும் முடக்கி போட்டது மட்டுமின்றி எல்லோரையும் முடங்கி கிடக்க செய்தாா். எவ்வளவு மக்கள் சிரமப்பட்டாா்கள் என்று அதை புாிந்து கொண்டு தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக வௌிமாநிலங்களிலிருந்து இரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மீளவிட்டானிலிருந்து லாாி மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை கவச உடையணிந்து நோில் சென்று பாா்த்து ஆறுதல் கூறிய ஓரே முதலமைச்சா் இந்தியாவில் தளபதியார் மட்டும்தான் பின்னா் படிப்படியாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் தளர்த்...

கட்டை காலில் நின்னுட்டு விஜய் என்ன பேச்சு.. ஒவ்வொரு வார்த்தையும் மறக்க கூடாது.. கீதாஜீவன் ஆவேசம்.!

Image
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் திமுக தவெக இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் திமுக, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனால் திமுகவினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தவெக கட்டை காலில் நிற்பதாகவும், விஜய் பேசும் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்து பதிலடி கொடுக்க வேண்டும் என கீதாஜீவன் ஆவேசமாக பேசியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "சட்டமன்ற தேர்தலில் தவெக மாய பிம்பத்தில் வெற்றி பெற்றது. மாய பிம்பத்தை உருவாக்கி தவெக ஆட்சியமைத்துள்ளது. படத்தில் ஒருவன் 100 பேரை அடித்து தூக்குவான். அதையெல்லாம் நம்பிட்டு இருக்கிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய் 100 பேரை அடிப்பார் என நம்புகிறார்கள். சின்ன பிள்ளைகளை வைத்து மாற்றத்தை தருகிறோம் என்று ஏமாற்றத்தை தந்துள்ளனர். அந்த மாய பிம்பத்தை நாம் உடைத்தாக வேண்டும். திமுக சிப்பாய்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக போர...

அம்பேத்கர் சிலைக்கு செயற்கை நீரூற்று அமைத்து தருமாறு கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை, நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்டீபன் ஜெயராஜ், கௌரவ தலைவர் துரை, கௌரவ ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில்  மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் உள்ள (தென் பாகம் காவல்நிலையம் அருகில்)  அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைந்துள்ள வளாகத்தில் செடிகள் வைத்து பராமரிப்பதற்காக தண்ணீர் வசதி வேண்டியும், அலங்கார நீரூற்று ஒன்றும் அமைத்துத் தருமாறு நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை, விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர் உறுதி. அம்பேத்கர் சிலை வளாகத்தில் தற்போது செடிகள் வைப்பதற்காக தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். மேலும் வரும் நாட்களில் செயற்கை நீரூற்று ஒன்றும் நேர்த்தியாக இந்த வளாகத்தினுள் அமைத்து தருகிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நந்தமிழர் தொழிலாளர்  நலச் சங்க நிர்வாகிகள் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்றி தருமாறு வேண்...

மாதா கோவில் திருவிழா பொருட்காட்சி : "தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்துவது பாதுகாப்பற்றது" - முதலமைச்சருக்கு புகார் மனு.!

Image
  தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய திருவிழாவின்போது செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி சவேரியானா விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள்  உள்ளதால் மாற்று இடத்தில் நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர் இது குறித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்: - "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற பரிசுத்த பனிமய அன்னை பேராலய (மாதா கோயில்) திருவிழா **ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை நடைபெற உள்ளது.   இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, மாதா கோயிலுக்கு அருகில் சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள அரசு உதவி பெறும் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியின் சவேரியானா விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறுவதாக அறிய வருகிறது. இந்த மைதானம் சுமார் 40 லட்ச ரூபாய் வாடகைக்கு தனியார் நபர்களுக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் இந்த இடத்தில் பின்வரும் கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன: 1. மைதானத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் 20 அடி அகலம் கொண்ட ஒரே பாதை மட்டுமேஉ...

அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் அரசு மரியாதை செலுத்துவதில் குளறுபடி - கோஷ்டி பூசலுக்குள் சிக்கி தவித்த கலெக்டர்..!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 316வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருட்சிலைக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவெக அமைச்சர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் அழகு முத்து கோன் திருவுருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, மாவட்ட ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியருடன் தனியாக வந்து அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 3 முறை நடந்த அரசு விழா அரசு விழா என்று அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் ஒருமுறை, இரண்டு அமைச்சர்கள் தனித்தனியே என 3 முறை நடந்...

திருப்பூர் அருகே கோர விபத்து... ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாப பலி!

Image
 ஊத்துக்குளி அருகே டீசல் டேங்கர் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்தில், காரில் பயணம் செய்த ஏழு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி. ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காரும் டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா, இவருடைய கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களது குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் பல்லடம் பகுதியில் உள்ள தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஒரே காரில் சென்றுள்ளனர்.  துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர்கள் மீண்டும் பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்திற்குத் தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களது கார் ஊத்துக்குளி அடுத்த காக்காபள்ளம் என்ற இடத்தை அடைந்தபோது, விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன...