வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் வல்லநாடு ஆற்றுபடுகையில் நான்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் மாநகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது பைப் லைன் மற்றும் உறைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகை...