Posts

Featured Post

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியுடன் அதிகாரி கூட்டு : பொய் வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது? - நடந்தது என்ன.?

Image
  சென்னை பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி (43). கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேர் புரோக்கர் அகில்குமார் என்பவரை ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி ஏற்கனவே ரூ.40 லட்சம் வாங்கியதாகவும், மேலும் ரூ.5 லட்சம் தரும்படி தற்போது மிரட்டியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'அகில்குமார் ஷேர் மார்க்கெட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர் 2ம் நம்பர் தொழிலும் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்ட வக்கீல் மொட்டை கிருஷ்ணன் என்பவரது செல்போனில் தொடர்ந்து அகில் குமார் பேசி வந்துள்ளார். மேலும் மொட்டை கிருஷ்ணனுக்கு, சிம்கார்டும் அவர்தான் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை போலீசார் அப்போது விசாரணை நடத்தி அனுப்பியுள்ளனர். அகில்குமாரை, ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கின் ...

“விளையாட்டை கையில் எடு… போதையை கைவிடு!” -தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி – செயின்ட் சேவியர்ஸ் அணி முதலிடம்.!

Image
தூத்துக்குடி: இளம் தலைமுறையினரை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில், தூத்துக்குடி நகர உட்கோட்டம் வடக்கு காவல் நிலையம் சார்பில் “விளையாட்டை கையில் எடு – போதைப்பொருளை கைவிடு” என்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. வடக்கு காவல் நிலையம் அருகிலுள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்ட் சேவியர்ஸ், சென்ட் தாமஸ், கால்டுவெல் பள்ளி, லசால் பள்ளி அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சென்ட் சேவியர்ஸ் பள்ளி அணி முதலிடத்தையும், லசால் பள்ளி அணி இரண்டாமிடத்தையும், கால்டுவெல் பள்ளி அணி மூன்றாமிடத்தையும், சென்ட் தாமஸ் பள்ளி அணி நான்காமிடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். சுனில் நற்சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும், மாணவர்கள் போதைப்பொருளைத் தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளர், மத்திய பாகம் காவல்நிலைய ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்த...

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்..!

Image
  தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டி மாநில காங்கிரஸ் தலைவா் மாணிக்க தாகூா் எம்.பி உத்தரவிற்கிணங்க காங்கிரஸ் கட்சியினர் பழைய மாநகராட்சி முன்பிலிருந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கைகளில் கருப்பு பலூன் ஏந்தியபடி அமைதி ஊர்வலம் சென்றனர். பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்வதாக கூறும் மத்திய அரசு, வட மாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தென் இந்தியாவில் பா.ஜ., அல்லாத மாநிலங்களில் தொகுதிகளை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்று இறுதியாக 1ம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ்,  மண்டல தலைவர்கள் ...

5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.!

Image
தூத்துக்குடி 5 ஆயிரம் குடும்பங்களை 21 நாளில் வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது திருப்பத்துர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்று கரையோர குடியிருப்புகளில் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் நாற்பது ஐந்து ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். திடீரென நகராட்சியிலிருந்து வந்து அனுமதியற்ற ஆக்கிரமிப்பு பொதுநிலம் ஆகவே 21 நாளில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என ஓட்டிய நோட்டீஸால் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதற்கு முன் மாற்று இடங்கள் அல்லது வீடுகள் கொடுக்க பட்டிருக்கிறதா இல்லை ? மேலும். எந்தவித மாற்று ஏற்பாடு செய்யாமல் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பதனால் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறி விடும். என்பதை தவெக அரசு மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே பொது மக்களின் நலனை கருதி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பத...

சுற்றுசூழல் பாதுக்காப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட உபியை சோ்்்ந்த இளைஞருக்கு தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் வரவேற்பு.!

Image
தூத்துக்குடி சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அயன்பர்னர்ஜி என்ற இளைஞர் நாடு முழுவதும் 7 ஆயிரம் கி.மீ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இதுவரை 165 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவருக்கு துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்பு துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி முன்னிலையில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆர்கானிக் முருங்கைவிதை வழங்கப்பட்டு சுற்றுசூழல் பற்றி எடுத்துரைத்தார்.

தூத்துக்குடியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

Image
  தூத்துக்குடி போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளித் தலைமை ஆசிரியை மெர்லின் பாக்கியவதி தலைமையில் பள்ளி மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி திரையில் ஒளிபரப்பப்பட்டு, மாணவிகள் அனைவரும் இணைந்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். போதைப்பொருளின் தீமைகள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை இல்லா சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி கல்லூாியில் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழி.

Image
  தூத்துக்குடி கல்லூரிக்கல்வி ஆணையர் கல்லூரிக்கல்வி இயக்கம் ஆணைக்கிணங்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற்படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கும்  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப்பொருள் தடுப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வம் தொகுத்து வழங்கினார்  கல்லூரி முதல்வர் வீரபாகு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க சுமார் 850 மாணவ மாணவியர்கள் மற்றும் 60 பேராசிரியர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற...