Posts

Showing posts from May, 2026

திமுக சட்டமன்றக்குழு தலைவராக உதயநிதி தேர்வு.!

Image
திமுக சட்டமன்றக்குழு தலைவராக உதயநிதி, துணைத்தலைவராக நேரு, கொறடாவாக வேலு தேர்வு செய்யப்பட்டனர்

பதவியேற்பதற்கு முன்னர் MLA பதவியை ராஜினாமா செய்த விஜய்!

Image
  தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பதவியேற்பதற்கு முன்னர் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா  செய்தார். ராஜினாமா செய்ததற்கான கடிதத்தினை, அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ப. வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஜோசப் விஜய்!- .வீரமணியை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை.!

Image
  தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்.!

Image
  தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவை தொடர்பாக தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி.லட்சுமி பிரியா , காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்" - திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்

Image
இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.  ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும்  ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.  'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப...

200 யூனிட் மின்சாரம் இலவசம் அறிவிப்பு - ஆனால் அனைவருக்கும் இலவச மின்சாரம் இல்லை!

Image
  தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார் தமிழ்நாட்டின் புதிய முதல்வர்.   இதுவரை மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

60 ஆண்டுகள் திராவிட ஆட்சிக்கு முடிவுரை எழுதிய விஜய்- தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்பு.!

Image
  சுமார் அறுபது ஆண்டுகளாக இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஞாயிற்றுக்கிழமை விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை சுமார் 10 மணியளவில் விஜய் பதவியேற்றார். பின்னர் தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். விழா மேடையிலேயே முக்கியமான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'போதைப்பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை ஆகியவற்றை அமல்பமுத்தும் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். விஜய் தலைமையில் தவெக புதிய அரசு அம...

"புதிய அரசுக்கு வாழ்த்துகள், திமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை தவெக தொடர வேண்டும்" - புதிய ஆட்சியமைவுள்ள நிலையில், மு.க. ஸ்டாலின் வாழ்த்து.!

Image
 தமிழகத்தில் தவெக ஆட்சியமைவுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தா...

முதலமைச்சர் ஆகிறார் விஜய்!!- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐஎம் ஆதரவு - விசிக நாளை ஆதரவு என தகவல் "அரசியல் சட்டப்படி - "புதிய ஆட்சி அமைய ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.!

Image
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை அறிவித்துள்ளன. கவர்னர் ஆட்சி என்ற பெயரில் பாஜக கொல்லைப் புற வழியாக ஆட்சியமைப்பதை தடுப்பதற்க்காக வெளியில் இருந்து ஆதரவு அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என சிபிஐ, சிபிஎம் அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் தலா 2 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வழங்கியது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விரைவில் கடிதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. இருப்பினும், 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 118 இடங்கள் இருந்தால்தான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்ற சூழலில், ஆளுநர் ஆர்.என். ர...

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது - தூத்துக்குடியில் மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: ஆட்சியர் தகவல்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டு, அரசுப் பணிகள் மீண்டும் வழக்கம்போல் தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 15-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளைத் திரும்பப் பெற்றுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இன்று (மே 7) காலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன. மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் மற்றும் இதர மக்கள் நலத் திட்ட முகாம்கள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்', வரும் திங்கள் (மே 11) முதல் வழக்கம்போல் நடைபெறும். தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொதும...

தூத்துக்குடி: பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு.!

Image
தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல சரித்திர பதிவேடு ரவுடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (36) துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டான் திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆக்னலை கைது செய்ய முயன்றபோது நாட்டு துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை சுட்டுள்ளார். இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆக்னலை, எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டு பிடித்தார் காயமடைந்த எல்.ஐ. ராஜபிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக து/த்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

"வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்" தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை.!

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆகியோருக்கு நன்றி இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  தூத்துக்குடி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் மற்றும் திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், அரசியல் பொதுவாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி - தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது ...

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மீண்டும் மக்கள் பணி தொடரும்" மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Image
  தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்றத் தேர்தல் தேதி 15.3.2026 அன்று அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுவடைந்து 234 தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.  தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் அலுவலகங்கள் மற்றும் அரசு சாா்ந்த செயல்பாடுகளில் தலையீடு இல்லாமல் சுதந்திரமான தோ்தல் நடைபெற வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தால் நடைமுறையிலிருந்த நடைமுறை நேற்று 6ம் தேதி மாலை 6 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டது. இன்று 7 ம் தேதி முதல் வழக்கமான பணிகளை தமிழகத்தில் மேயா்கள் நகா்மன்ற தலைவர்கள் ேபரூராட்சி மன்ற தலைவர்கள் தங்களது மக்கள் பணிகளை தொடங்கவுள்ளனா்.   இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த 50 மாதங்களாக மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுபகுதிகளிலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பாரபட்சமின்றி பணிகளை மேற்கொண்டு வந்தோம். தோ்தல் நடைமுறைக்கு பின்னா் அப்பணி ெதாடராமல் இருந்த நிலையில் தோ்தல...

'1 ஓட்டு முதல் 976 ஓட்டுகள்' வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த 15 பேர் யார்? தவெகவினர் எத்தனை பேர்?

Image
  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளன. எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக உள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பெற்ற வெற்றி, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது. ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் யார்? எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி? கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். கள்ளக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் அதிமுக வேட்பாளர் ராஜிவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கன்னியாகுமரி தொகுதியில் அதிமு...

"விசிகவிடம் தவெக ஆதரவு கோாியுள்ளது"-விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி

Image
  தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக ஆதரவு கோாியுள்ளது தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது தொடர்பான நிலைப்பாட்டை திருமாவளவன் அறிவிப்பார் என விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க விஜயின் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு - காங்கிரஸ்!

Image
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முறைப்படி காங்கிரஸ் ஆதரவை கோரியிருந்தது தவெக - கிரிஷ் சோடங்கர் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி இப்போது த.வெ.கவிற்கு நிபந்தனையுடன் அளித்துள்ள ஆதரவு என்பது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தேர்தல்களுக்காகவும் சேர்த்தே அமைக்கப்பட்டதாகும் என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கோர்ட்டில் செய்தியாளருக்கு கொலை மிரட்டல் : வேடநத்தம் மாணவி கொலை குற்றவாளி மீது வழக்குபதிவு..!

Image
  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி காணாமல் போன +2 படிக்கும் மாணவி, மறுநாள் காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், மாணவியை வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவன் மீது ஏற்கனவே 33 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், ஒரு மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிய குற்றத்துக்காக நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வெளியில் வந்திருப்பதும் தெரிய வந்தது. பின்னர் தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக, தரும முனீஸ்வரனை போலீசார் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் அவனை படம்  பிடிக்க முயன்ற செய்தியாளரை, "ஏய்... செத்து போய்ருவா. பார்த்துக்கோ..." என்று போலீசார் கண்முன்னே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளான். உடனே, போலீசார் "என்ன பேச்சு பேச...

தூத்துக்குடி TVK எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!

Image
  தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீநாத்தை, காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல், அவரை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த வாழ்த்து நிகழ்வின் போது, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜான் பிரிட்டோ மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

முதலமைச்சர் பதவி : மு.க.ஸ்டாலின் ராஜினாமா.! "தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" - ஸ்டாலின் அறிக்கை.!

Image
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். அவரது கட்சி வேட்பாளர்களும் பலர் தோல்வியடைந்தனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 108 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அவர் விரைவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவில் இருப்பதால் அவர் பார்வைக்கு மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதம் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றார். புதிய அரசு பதவியேற்கும் வரை காபந்த் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் தொடர்வார். இந்நிலையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித...

தூத்துக்குடி 6 தொகுதிகள்; திமுக அணி-3, தவெக-3 -சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்கு விபரம்

Image
  விளாத்திக்குளம்: திமுக வெற்றி மார்க்கண்டேயன் (திமுக) 58,395 காசிராம் (தவெக) 50,167 ஆர்.சத்யா (அதிமுக) 48,879 பாலாஜி (நாதக) 11,780 நோட்டா 642 திமுக 8,228 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தூத்துக்குடி: தவெக வெற்றி ஸ்ரீநாத் (தவெக) 1,00,536 பி.கீதாஜீவன் (திமுக) 62,805 செல்லப்பாண்டியன் (அதிமுக) 26,213 ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக) 11,752 நோட்டா 853 தவெக 37,731 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி திருச்செந்தூர்: திமுக வெற்றி அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) 72,723 முருகன் (தவெக) 66,851 ராதாகிருஷ்ணன் (பாஜ) 34,159 ஒபிலியா (நாதக) 9,794 நோட்டா 722 திமுக 5,872 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி ஸ்ரீவைகுண்டம்: தவெக வெற்றி சரவணன் (தவெக) 58,814 சண்முகநாதன் (அதிமுக) 57,628 ஊர்வசி அமிர்தராஜ் (காங்) 41,277 சண்முகசுந்தரம் (நாதக) 13,153 நோட்டா 579 தவெக 1186 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கோவில்பட்டி: திமுக வெற்றி கருணாநிதி (திமுக) 61,643 பாலசுப்பிரமணியன் (தவெக) 60,800 கடம்பூர் ராஜூ (அதிமுக) 53,014 பாண்டி (நாதக) 11,919 நோட்டா 593 திமுக 843 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி ஓட்டப்பிடாரம்(தனி): தவெக வெற்றி மதன் ராஜா (தவெக) ...

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்!

Image
  வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான தர்ம முனீஸ்வரன் இன்று பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த சில காலத்திற்கு முன்பு கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த தர்ம முனீஸ்வரனை விசாரணைக்காக போலீசார் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசுத் தரப்பு மற்றும் காவல் துறையினர் தரப்பில் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இன்று இந்த வழக்கில் தொடர்புடைய 15 முக்கியச் சாட்சிகளிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. சாட்சிகளின் வாக்கு...

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய கால் நாட்டு விழா!

Image
  பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய 70 வது ஆண்டு விழா கால் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில், இந்திய விடுதலைப்போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய விழா சித்திரை மாதம் கடைசி வெள்ளி  மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற மே 8,9,10 ஆம் தேதிகளில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வீரசக்கதேவி ஆலயத்தில் கால் நாட்டு விழா  நடந்தது. அதனைமுன்னிட்டு, வீரசக்கதேவிக்கு  சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கால் நாட்டு விழாவில் வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் குளத்தூர் மாஜி ஜமீன்தாரர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வீரசக்கதேவி ஆலய 70 வது ஆண்டு விழா, வருகிற 08.05.2026, 09.05.2026, 10.05.2026 (சித்திரை 25, 26, 27) வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும், பாஞ்சாலங்குறிச்சியில் வெகு விமர்சையாக ந...