அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் நகர ஒன்றிய செயலாளர்கள் நியமனம் .!

 

வேலூர் மே.31 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்  பூபாலன் குடியாத்தம் நகர செயலாளர் சம்பத்குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி ஆகியோருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதவி நியமனம் செய்தார்.

தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றியம் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் குடியாத்தம் காமராஜர் பலம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் வேலூர் மாநகர செயலாளர் சதீஷ்குமார் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சிட்டிபாபு கழக அமைப்பு செயலாளர் ராஜா தர்மலிங்கம் காசி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் நகர பொருளாளர் நவ்ஷாத் நகர நிர்வாகிகள் கார்த்தி தனஞ்செயன் ஹரிராஜா ராஜேஷ் மற்றும் பேரணாம்பட்டு நகர கழகச் செயலாளர் சுரேஷ் மற்றும் ஜெயபிரகாஷ் காதர் தினேஷ்குமார் ஹோமத்குமார் ஜீவா தினேஷ்குமார் சரவணன் மாதனூர் ஒன்றிய காலகட்ட செயலாளர் சம்பத் குமார் வேலூர் மாவட்ட நகர மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மேலும் தந்தை பெரியார் சிலை அருகில் இருந்து கட்சியின் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர் ஊர்வலத்தில் சிலம்பாட்டம் மேலத்தாலத்துடன் ஊர்வலம் சென்றனர் என குறிப்பிடப்படுகிறது