Posts

Showing posts from June, 2026

நெல்லை மண்டல அதிமுக ஐடிவிங் இணைச் செயலாளர் அதிமுகவில் இருந்து விலகல் -தவெகவில் இணைகிறார்.!

Image
நெல்லை மண்டல அதிமுக ஐடிவிங் இணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, அதிமுகவில் இருந்து விலகுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது விலகல் கடிதம் அனுப்பியுள்ளார்.  இது குறித்து அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :-கழக நிர்வாக பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும் இதய தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்களையும் வணங்கி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2008 முதல் ஒரு சாதாரண தொண்டனாக அரசியல் பயணத்தை தொடங்கி, பின்பு கழகத்தின் சட்டக் கல்லூரி மாணவர் அணியில் செயலாளராக தொடங்கிய நாள் முதல் இன்று வரை கழகத்திற்காக தொடர்ந்து உழைத்து வந்து கொண்டிருக்கிறேன். இன்று எதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைச் செயலாளராக இருந்து அதன் பின்பு திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை செயலாளராக கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் நியமிக்கப்பட்டேன். மிக்கப்பட்டேன். அன்று முதல் தற்போது வரை தொடர்ந்து கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்துள்ளேன். கழக பணிகளை ஆற்ற...

அதிமுகவிலிருந்து விலகியது ஏன்?"எம்ஜிஆரின் மறு உருவம் தமிழகத்தின் பொற்கால முதல்வர் விஜய்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ விளக்கம்.!

Image
  அதிமுகவிலிருந்து விலகி  தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் தொடர் தோல்வி சகஜமாகிவிட்டது. கட்சியில் பிளவும் அதிகரித்துவிட்டது. பிளவுகளும் சரிவுகளும் சரி செய்யப்படும் என்பது கானல் நீராக தான் முடியும். கட்சியின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் துணை போகி விடக்கூடாது என்ற மனக்குமுறலோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்  முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்  ஜெயலலிதா கனவை நினைவாக்கி ஆட்சி அதிகாரத்திலிருந்து தீய சக்தி திமுகவை  வீழ்த்தி, தூய சக்தியாக எம்ஜிஆர் வழியில்  பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகனாக  புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மறு உருவமாக விளங்கும்  புரட்சித் தளபதி மாண்புமிகு தமிழகத்தின் பொற்கால முதல்வர் விஜய் தலைமையில் மக்கள் பணியாற்றிட தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

த.வெ.கவில் இணைந்த முன்னாள் அமைச்சரை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர்  கடம்பூர் செ. ராஜீ இன்று அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இந்நிலையில் த. வெ. கவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசு தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி: மதுக்கடையை மூடக்கோரிப் பொதுமக்கள் முற்றுகை : மூடக் கூடாது என மதுப்பிரியர்கள் எதிர்ப்பு - தூத்துக்குடியில் பரபரப்பு!

Image
  தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், கடையைத் திறக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் போட்டி ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பும் நிலவி வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இடையூறாக இருக்கும் 717 மதுபானக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவ்வுத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இதில், தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு உட்பட்ட 13 கடைகள் அடங்கும். குறிப்பாக, நகரின் பிரதான போக்குவரத்துச் சாலைகளில் அமைந்திருந்த மாட்டுத்தாவணி, இரண்டாவது ரயில்வே கேட் பகுதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் எட்டயபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்த கடைகள் மூடப்பட்டதால், அப்பகுதிகளில் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க...

தூத்துக்குடியில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு: மீன்பிடி தகராறில் ஏற்பட்ட கொடூரம்!

Image
  தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சீனி மகன் காந்தி (56) என்ற மீனவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன்களுக்கும் இடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகத் தொழில் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு விவேகானந்தர் நகர் கடற்கரை அருகில் காந்தி மற்றும் அவரது மகன்களான அசோக் குமார் (27), அஜய் (22) ஆகிய மூன்று பேரும் அமர்ந்து தங்களது மீன்பிடி வலைகளைப் பின்னிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேர் கொண்ட கும்பல், காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.  வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காந்தியை வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அவரது மகன்கள் அசோக் குமார், அஜய் ஆகியோருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது அருகே வலை பின்னிக் கொண்டிருந்த கருப்பண்ணன் மகன் பூசாரி (58) மற்றும் அவரது மகன் விஜி (32) ஆகியோர் ஓடிவந்து இந்த மோதலைத் தடுக்க முயன்றனர்.  ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கொண்ட கும்பல், தடுக்க வந...

4 முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ உட்பட ஏராளமானவர்கள் இன்று அதிமுகவில் இருந்து தவெகவில் இணைகின்றனர்.! -- அனைவரும் பனையூர் வருகை.!

Image
* அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் * அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் * அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன் * அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ * பாப்பிரெட்டிப்பட்டி Ex. எம்எல்ஏ  கோவிந்தசாமி * சங்ககிரி தொகுதி Ex. எம்எல்ஏ சுந்தரராஜூ * வீரபாண்டி Ex. எம்எல்ஏ ராஜமுத்து  * ஸ்ரீவில்லிபுத்தூர் Ex. எம்எல்ஏ மான்ராஜூ * கலசப்பாக்கம் Ex. எம்எல்ஏ பன்னீர்செல்வம் * சிவகாசி Ex. எம்எல்ஏ ராஜவர்மன் * ஆற்காடு Ex. எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் ஆகியோர் இன்று தவெகவில் இணைகின்றனர்

மீன்பிடி துறைமுகங்களை சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டம்: மீனவர்களின் சுதந்திரத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது! - SDPI கட்சி வலியுறுத்தல்!

Image
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தியாவின் கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள 1,200 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கீழ் கொண்டு வர ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள சென்னை - காசிமேடு தொடங்கி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களும், நூற்றுக்கணக்கான மீன்பிடி இறங்கு தளங்களும் மத்திய பாதுகாப்புப் படையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை உருவாகும். விமான நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பொதுத்துறை பெருநிறுவனங்களுக்குரிய கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை மீன்பிடி துறைமுகங்களில் திணிப்பது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் படகுகளும் வந்து செல்லும் ஒரு சுறுசுறுப்பான பணியிடமே இத்துறைமுகங்கள் ஆகும். இங்கு பயோமெட்ரிக...

மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக ஸ்ரீநாத் நியமனம்.!

Image
  தமிழக அரசின் வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்துவதற்கு மாவட்டங்கள் தோறும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சரோடு சேர்த்து தவெக 31 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 2 எம்.எல்.ஏக்கள், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் தலா 1 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 35 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்த சூழலில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவும், அரசின் நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் என்.ஆனந்த் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் மயிலாடுதுறை மாவட்டத்துக்கும், நிதியமைச்சர் மரிய வில்சன் திருநெல்வேலி மாவட்ட...

ராஜ்யசபா எம்பி பதவி - காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக

Image
  தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக வரும் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கீடு - முதலமைச்சர்  தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ராஜ்யசபா தேர்தலில் தவெக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி தவெக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது சற்று நேரத்திற்கு முன்பு காங்., நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ராஜ்யசபா எம்பி பதவியை கோரியிருந்தனர் காங்கிரஸ் கோரியதன் அடிப்படையில் ராஜ்யசபா எம்பி பதவியை ஒதுக்கீடு செய்து தவெக அறிவிப்பு