நெல்லை மண்டல அதிமுக ஐடிவிங் இணைச் செயலாளர் அதிமுகவில் இருந்து விலகல் -தவெகவில் இணைகிறார்.!
நெல்லை மண்டல அதிமுக ஐடிவிங் இணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, அதிமுகவில் இருந்து விலகுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது விலகல் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :-கழக நிர்வாக பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும் இதய தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்களையும் வணங்கி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2008 முதல் ஒரு சாதாரண தொண்டனாக அரசியல் பயணத்தை தொடங்கி, பின்பு கழகத்தின் சட்டக் கல்லூரி மாணவர் அணியில் செயலாளராக தொடங்கிய நாள் முதல் இன்று வரை கழகத்திற்காக தொடர்ந்து உழைத்து வந்து கொண்டிருக்கிறேன். இன்று எதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைச் செயலாளராக இருந்து அதன் பின்பு திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை செயலாளராக கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் நியமிக்கப்பட்டேன். மிக்கப்பட்டேன். அன்று முதல் தற்போது வரை தொடர்ந்து கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்துள்ளேன். கழக பணிகளை ஆற்ற...