"தூத்துக்குடியில் எப்போதும் பார்க்காத அளவுக்கு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்" - தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு
தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி வரவேற்புரையாற்றினாா். வேட்பாளா்களான தெற்கு மாவட்டதிமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மாா்க்கன்டேயன் எம்எல்ஏ கருணாநிதி ஊா்வசி அமிா்தராஜ் ராமஜெயம் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பேசுகையில்:- முத்துநகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்து இருக்கிறேன். மீன்வளமும், துறைமுகமும் வணிகமும் செழிக்க கூடிய தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய் இங்கு ஸ்பெஷலானது. அந்த இரண்டு இனிப்பு போன்று, இந்த மாவட்ட மக்கள் இனிமையானவர்கள். ஸ்வீட் மட்டுமா தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்கிறீர்கள். உப்பும் நீங்கள்தான் சப்ளை செய்கிறீர்கள். தனது சொத்துக்கள் அனைத்தும் விற்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ந...