Posts

Showing posts from April, 2026

"தூத்துக்குடியில் எப்போதும் பார்க்காத அளவுக்கு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்" - தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
  தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி வரவேற்புரையாற்றினாா். வேட்பாளா்களான தெற்கு மாவட்டதிமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மாா்க்கன்டேயன் எம்எல்ஏ கருணாநிதி ஊா்வசி அமிா்தராஜ் ராமஜெயம் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பேசுகையில்:- முத்துநகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்து இருக்கிறேன். மீன்வளமும், துறைமுகமும் வணிகமும் செழிக்க கூடிய தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய் இங்கு ஸ்பெஷலானது. அந்த இரண்டு இனிப்பு போன்று, இந்த மாவட்ட மக்கள் இனிமையானவர்கள். ஸ்வீட் மட்டுமா தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்கிறீர்கள். உப்பும் நீங்கள்தான் சப்ளை செய்கிறீர்கள். தனது சொத்துக்கள் அனைத்தும் விற்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ந...

"முதல்வா் ஸ்டாலின் ஆயிரம் உாிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த போது முடியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி இப்போது வடிவேலுவை போல் நானும் ரவுடிதான் என்ற காமெடி அரசியலை செய்கிறாா் " தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேச்சு

Image
தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து திரேஸ்புரம் மட்டக்கடை பாத்திமாநகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளா் நிா்மல்ராஜ், வட்டச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், அல்பட் லியோ ஜான்சன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேசுகையில்:-  2021ல் நடைபெற்ற தோ்தலில் அமைச்சா் கீதாஜீவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தோம். 2021 தோ்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் பாிதாபமான நிலையில் இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் ஆக்ஜிசன் தட்டுபாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அதையெல்லாம் சாிசெய்து 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வருமானம் வேலைவாய்ப்பு கல்வி மகளிா் மேம்பாடு என எல்லாத்துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன் எந்த வளர்ச்சியும் அடையாத அதிமுக ஆட்சியை பாா்த்தோம். திமுக ஆட்சியில் எல்லோருக்...

"எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி அமைய எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும்" -முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு.!

Image
  தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 34வது வாா்டுக்குட்பட்ட 3ம் மைல் பசும்பொன் நகா் பி அண் டி காலணி கிழக்கு அசோக்நகா் ஆசிாியா்காலணி, ராஜீவ் நகா், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தாா்.  முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் அதிமுகவை உருவாக்கி மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் அனைவருக்குமான ஆட்சியை வழங்கினாா். அதே வழியில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி நாட்டுமக்களுக்கான திட்டங்களான மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை தங்கம் என வரலாற்று சாதனையை செய்து அவரது மறைவிற்கு பின் 3ம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்தி அதிமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றினாா்.  தூத்துக்குடி தொகுதியில் செய்த சாதனைகள் ஏராளம் வரும் தோ்தல் வாக்குறுதியாக ஆண்களுக்கும் கட்டணம் இல்லாத பேருந்து அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டம் குடும்ப அட்டை தாரா்களுக்கு ஆண்டுக்கு 3...

த.வெ.க.வில் புறக்கணிப்பு - திமுகவில் இனைந்த அஜிதா ஆக்னல்!!

Image
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். கடந்தாண்டு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து முறையிட விஜய்யைச் சந்திக்க முயன்று மக்களிடையே கவனம் ஈர்த்தார். இவரை விஜய் சந்திக்காததும் பெரும் பேசுபொருளானது. பொறுப்பு வழங்கப்படாவிடினும் கட்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளர் பட்டியலிலும் இவர்பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த அஜிதா திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தவெக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன் ஆதரவாளருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.  நிகழ்ச்சியில் மீனவர் நலன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண...

'பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா், வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்"- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். 24 25 26 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி, வட்டச்செயலாளர்கள் ரோலன்ட், ஆண்ஸ், அல்பட், ரவி இளங்கோ, கவுன்சிலா்கள் எடிண்டா, மெட்டில்டா, மாியகீதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரேஸ்புரம் அண்ணா காலணியில் பிரச்சாரத்தை துவக்கி மட்டக்கடை, குரூஸ்புரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில்:- "வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தம...

தூத்துக்குடி :சொத்து தகராறில் தம்பி கூலிப்படையினரை வைத்து அண்னனை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

Image
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சார்ந்த அய்யம்பெருமாள், இவரது மூத்த மகன் சுயம்புலிங்கம் இவருக்கு நான்கு சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது தம்பி அணில் சிவலிங்கம் கூலிப்படையினரை வைத்து தன்னை கொல்ல முயல்வதாக அவரது அண்ணன் சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், எனது தம்பி அணில் என்ற சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார். அங்கு நிறைய மோசடி வேலையில் ஈடுபட்ட நிலையில், தனது அண்ணன் சொத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுகுறித்து வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அது தனிப்பட்ட முறையில் நான் சம்பாதித்த பணம் மூலம் சொத்து வாங்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, ஆவேசம் அடைந்த அவரது தம்பி அணில் சிவலிங்கம் தனது சகோதரர் சுயம்புலிங்கத்தின் காரை எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார். அந்தப் பகுதி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஜீவமணி தர்மராஜ் மாற்றப்பட்டதை தொடர்ந்து ஊர் பக்கம் வராமல் இருந்த அனில் சிவலிங்கம் ஆய்வாளர் மாறியதை தொடர்ந்த...

"5 ஆண்டு திமுக ஆட்சி சாதனையை எண்ணி பாருங்கள் மாநகராட்சி முழுவதும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது"- பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். 6, 11, 12, 21, ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா் மேயா் ஜெகன்பொியசாமி வட்டச்செயலாளர்கள் சுரேஷ், சந்தனமாாிமுத்து, தெய்வேந்திரன், முனியசாமி, கவுன்சிலா்கள் ஜெயசீலி, கற்பககனி, ஜான்சிராணி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  சேவியா்நகா், மீனவா் காலணியில் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரத்தை தொடங்கி மேல அலங்காரத்தட்டு கோவில்பிள்ளை விளை சக்தி விநாயகபுரம், கந்தசாமிபுரம், இஞ்ஞாசியா் புரம், கோமதிபாய் காலணி, அழகேசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மலா் தூவியும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் உற்சாக மாக வரவேற்றனா்.  அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:- தமிழகத்தின் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் உங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தோ்ந்ெதடுக்க உள்ளீர்்கள் 5 ஆண்டுகாலம் தூத்துக்குடி தொகுதியில் நான் ஆற்றிய பணிகளை எண்ணிப்பாருங்கள். தமிழகத்தில் முத...

திருப்பூர் தெற்கில் வெற்றி பெறுவோம்... அதிமுக, பாஜக, அமமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூளுரை

Image
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருப்பூர் தெற்கு தொகுதியில் தாராபுரம் சாலை புதூர் பிரிவில் தேர்தல் பணிமனையினை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன், மாநில நிர்வாகி மலர்க்கொடி, செந்தில்வேல், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி, தமாக மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், இந்துமுன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்குராஜாமணி, மஜமுக இப்ராஹிம் பாதுஷா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.  தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாத...

2 இலட்சம் ரூபாய் பண மாலையால் எழுந்த சர்ச்சை- அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தேர்தல் விதிமுறையை மீறுகிறாரா?

Image
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள பண்டார விளை பகுதியில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..  தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற வேட்பாளருமான சண்முகநாதனுக்கு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 500 ரூபாய் நோட்டுகளால் கட்டப்பட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பண மாலையை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்பாளர் செல்வகுமார் சம்பவத்தின் புகைப்படங்களை இணைத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக முறையான புகார் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் காலத்தில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை வெளிப்படையாக மாலையாக பயன்படுத்தியிருப்பது விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

சாத்தான்குளம் வழக்கு : "ஆயுள் தண்டனை அச்சம் தராது ,9 பேருக்கும் மரண தண்டனை.!" - நீதிமன்றம் அதிரடி

Image
  சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் இந்த வழக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி சாத்தான் குளம் வழக்கானது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில்,`` தந்தையையும், மகனையும் ஒருவர் முன் ஒருவர் நிர்வாணப்படுத்தி, மனம்போனபோக்கில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தைப் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது. காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அச்சம் தராது. மரண தண்டனை விதிப்பதே சிறந்தது" எனக் கூறப்பட்டி...

"விதிப்படி எல்லாம் நடக்க முடியாது, உள்ளே விட்றியா இல்லையா " - தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்

Image
தூத்துக்குடி தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று    தூத்துக்குடி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.  வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி. இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நபர் உள்ளே சென்று விட்டார் அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்புமனு பெற முடியும் என்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் தேர்தல் அதிகாரி கூறிவிட்டார். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் வெளியே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் மற்றும் இரண்டு பேர் உள்ளே செல்ல முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் உள்ளே செல்ல விட முடியாது சரியான ஆட்கள் உள்ளே சென்று விட்ட...

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல்- அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களம்.!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். இந்நிலையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சமத்துவமக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், முக்குலத்தாோ் புலிப்படை மாவட்ட செயலாளா் மணி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் முகமது அசன், ஆகியோா் முன்னிலையில் மாா்த்தான்பட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் த...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளி தேர்தல் பரப்புரை.

Image
  தமிழக சட்டசபை தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  ஆங்காங்கே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் சூறாவளியாக குடியாத்தம் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களது இல்லத்துக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பை நடத்தி வருகிறார். அதன்படி 4ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான கடாம்பூர் ,உமராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று வீதி வீதியாக வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பரிதா. பரிதாவுடன் ஒன்றிய செயலாளர் பொகளூர் பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாக புடைசூழச் சென்றனர். ஆங்காங்கே இருந்த தொழிலதிபர்களையும் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமனை ...

"மக்களோடு பணியாற்றிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், தோ்தலுக்காக மட்டும் வருபவா்களை புறக்கணிக்க வேண்டும்"- சாதனைகளை சொல்லி அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகாிப்பு.

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.  37 மற்றும் 42வது வாா்டு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலா் பாப்பாத்தி, வட்டச்செயலாளா்கள் சுரேஷ்மகாராஜா, மாாிமுனீஸ்வரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். காரணம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் குறைபாடுகள் என்றாலும் மக்களோடு மக்களாக எப்போதும் உங்களுடன் இருந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக பிஜேபி தவெக ஆகிய கட்சிகள் தோ்தலுக்கு முன்று மாதத்திற்கு முன்பு தான் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வருவாா்கள் ஆனால் 5 ஆண்டுகாலம் கொரோனா மழை வௌ்ளம் காலத்தில் என்ன நடந்தது கூட பாா்ப்பத்கு கூட வந்திருக்க ம...

தூத்துக்குடி :நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி ஆதரவு.!

Image
  புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடி மாநகரப் பொறுப்பாளர் சுஜித், புறநகர் பொறுப்பாளர் பெரியார் பித்தன், நெல்லை மாநகர பொறுப்பாளர் பாண்டியன் தென்காசி மாநகரப் பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். மாநகரப் பொறுப்பாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும் பாஜக-அதிமுக கூட்டணியும் முதன்மையாக போட்டியிடுகின்றன.  இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 'பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கும் தமிழக உரிமைகளுக்கும் எதிரான கூட்டணி. எனவே அக்கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. மாறாக திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மட்டுமே வாக்களிக்க வேண்டும்' என தமிழ்நாடு முழுவதும் எங்கள் அமைப்பு சார்பாக பரப்புரை செய்ய உள்ளோம். ஏனென்றால் வர்ணாசிரம அடிப்படையிலான சமஸ்கிருத ஆதிக்க, மதவாத நாடாக இந்தியாவை மாற்றும் கொள்கையைக் கொண்ட ஒரு சனாதன பாசிச அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்த ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவே பாஜக உள்ளது. இந்த பாஜக 12 ஆண்டு கா...

வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தில் மாணவர் உயிரிழப்பு

 பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தில் மாணவர் உயிரிழப்பு கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் ஐந்தாவது மலையில் ஏறிக்கொண்டிருந்த போது இளம் மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (23) என்பவர், பேரூர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே வாடகை வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில், நண்பர்கள் அபி, மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருடன் வெள்ளிங்கிரி மலையை ஏறத் தொடங்கியுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலையை அடைந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்களின் உதவியுடன் மீட்க முயன்றும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, டோலி தூக்கும் நபர்களின் உதவியுடன் அவரது உடல் மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் சீமான் பிரசாரம்

Image
 இலைக்கு ஓட்டு போட்டீர்கள் மொட்டையாகி போச்சு.  சூரியனுக்கு வாக்களித்தீர்கள் அவர்கள் வீட்டில் விடிந்தது. தமிழகம் இருண்டது. விசில் தியேட்டரில் ஊதி கிடந்தார்கள் இப்போது தெருவில் ஊதுகிறார்கள். விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என சீமான் திருப்பூரில் பரப்புரை. திருப்பூர் யூனியன் மில் சாலையில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை கூட்டம் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்  ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்த பரப்புரை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக திருப்பூர் பரப்புரைக் கூட்டத்திற்கு 9.20 மணிக்கு சீமான் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து பேச துவங்கிய சீமான் தன்னுடைய ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என வீடியோ காட்சிகள் மூலம் விளக்கி உரையாற்றினார். அதில் தொழிற்சாலைகள் மூலமாக தமிழகம் மாசு நிறைந்து உள்ளதாகவும் அதிலிருந்து விவசாயம் சார்ந்த தொழில்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் தரமான கல்வி மருத்துவம் குடிநீர் உள்ளிட்டவை கட்டணம் இன்றி வழங்கப்படும் ஆனால் நல்ல சாலைகள், தரமான சேவைகள் இடை நிறுத்தா மின்சாரம் என வழங்கப்படும் அனைத...

மகளிர் உரிமைத்தொகையில் திமுக ஒரு கோடி குடும்பங்களை ஏமாற்றி விட்டது... திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

Image
திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம், திருப்பூர் ஒன்றிய கழகத்துக்குட்பட்ட தட்டான்குட்டையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.  இந்தக்கூட்டத்துக்கு ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். கழக அவைத்தலைவர் பழனிசாமி, பாஜக நிர்வாகி சின்னசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகி கொங்கு ராஜாமணி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற இயலாத போது, மத்திய நிதி வர தாமதமானது. அதற்காக மாநில அரசின் நிதியிலேயே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதற்கு ஆய்வு செய்து 1600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவர் எடப்பாடியார்.  இந்த திட்டத்தை நிறைவேற...

சாத்தான்குளம் வழக்கு:9 போலீசாருக்கும் மரண தண்டனை - சிபிஐ இறுதி வாதம்!

Image
கடந்த அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு மதுரை நீதிமன்றத்தில் இறுதி வாதம். குற்றவாளிகள் 9 பேருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்க உள்ள நிலையில், சிபிஐ தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்துள்ளது.

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!

Image
  பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்மமுனீஸ்வரனுக்கு, முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில், இவர் ஏற்கனவே ஒரு மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின்னர் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே இருந்தவர் என்பது தெரியவந்தது. பெற்றோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "நாங்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டில் தனி கழிப்பறை வசதி இல்லாததால், கடந்த 10-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக எங்கள் மகள் வெளியே சென்றிருந்தாள். மகள் வீடு திரும்பாததால் முதலில் குளத்தூர் காவ...