Posts

Showing posts from July, 2026

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Image
  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்  வல்லநாடு ஆற்றுபடுகையில் நான்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் மாநகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது பைப் லைன் மற்றும் உறைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகை...

தவெக விஜய் ரீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற போல்பேட்டை பகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலக்கட்டம் அதற்கு முன்பு இருந்து எடப்பாடி எல்லா தொழிலையும் முடக்கி போட்டது மட்டுமின்றி எல்லோரையும் முடங்கி கிடக்க செய்தாா். எவ்வளவு மக்கள் சிரமப்பட்டாா்கள் என்று அதை புாிந்து கொண்டு தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக வௌிமாநிலங்களிலிருந்து இரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மீளவிட்டானிலிருந்து லாாி மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை கவச உடையணிந்து நோில் சென்று பாா்த்து ஆறுதல் கூறிய ஓரே முதலமைச்சா் இந்தியாவில் தளபதியார் மட்டும்தான் பின்னா் படிப்படியாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் தளர்த்...

கட்டை காலில் நின்னுட்டு விஜய் என்ன பேச்சு.. ஒவ்வொரு வார்த்தையும் மறக்க கூடாது.. கீதாஜீவன் ஆவேசம்.!

Image
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் திமுக தவெக இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் திமுக, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனால் திமுகவினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தவெக கட்டை காலில் நிற்பதாகவும், விஜய் பேசும் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்து பதிலடி கொடுக்க வேண்டும் என கீதாஜீவன் ஆவேசமாக பேசியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "சட்டமன்ற தேர்தலில் தவெக மாய பிம்பத்தில் வெற்றி பெற்றது. மாய பிம்பத்தை உருவாக்கி தவெக ஆட்சியமைத்துள்ளது. படத்தில் ஒருவன் 100 பேரை அடித்து தூக்குவான். அதையெல்லாம் நம்பிட்டு இருக்கிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய் 100 பேரை அடிப்பார் என நம்புகிறார்கள். சின்ன பிள்ளைகளை வைத்து மாற்றத்தை தருகிறோம் என்று ஏமாற்றத்தை தந்துள்ளனர். அந்த மாய பிம்பத்தை நாம் உடைத்தாக வேண்டும். திமுக சிப்பாய்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக போர...

அம்பேத்கர் சிலைக்கு செயற்கை நீரூற்று அமைத்து தருமாறு கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை, நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்டீபன் ஜெயராஜ், கௌரவ தலைவர் துரை, கௌரவ ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில்  மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் உள்ள (தென் பாகம் காவல்நிலையம் அருகில்)  அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைந்துள்ள வளாகத்தில் செடிகள் வைத்து பராமரிப்பதற்காக தண்ணீர் வசதி வேண்டியும், அலங்கார நீரூற்று ஒன்றும் அமைத்துத் தருமாறு நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை, விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர் உறுதி. அம்பேத்கர் சிலை வளாகத்தில் தற்போது செடிகள் வைப்பதற்காக தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். மேலும் வரும் நாட்களில் செயற்கை நீரூற்று ஒன்றும் நேர்த்தியாக இந்த வளாகத்தினுள் அமைத்து தருகிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நந்தமிழர் தொழிலாளர்  நலச் சங்க நிர்வாகிகள் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்றி தருமாறு வேண்...

மாதா கோவில் திருவிழா பொருட்காட்சி : "தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்துவது பாதுகாப்பற்றது" - முதலமைச்சருக்கு புகார் மனு.!

Image
  தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய திருவிழாவின்போது செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி சவேரியானா விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள்  உள்ளதால் மாற்று இடத்தில் நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர் இது குறித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்: - "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற பரிசுத்த பனிமய அன்னை பேராலய (மாதா கோயில்) திருவிழா **ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை நடைபெற உள்ளது.   இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, மாதா கோயிலுக்கு அருகில் சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள அரசு உதவி பெறும் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியின் சவேரியானா விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறுவதாக அறிய வருகிறது. இந்த மைதானம் சுமார் 40 லட்ச ரூபாய் வாடகைக்கு தனியார் நபர்களுக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் இந்த இடத்தில் பின்வரும் கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன: 1. மைதானத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் 20 அடி அகலம் கொண்ட ஒரே பாதை மட்டுமேஉ...

அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் அரசு மரியாதை செலுத்துவதில் குளறுபடி - கோஷ்டி பூசலுக்குள் சிக்கி தவித்த கலெக்டர்..!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 316வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருட்சிலைக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவெக அமைச்சர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் அழகு முத்து கோன் திருவுருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, மாவட்ட ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியருடன் தனியாக வந்து அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 3 முறை நடந்த அரசு விழா அரசு விழா என்று அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் ஒருமுறை, இரண்டு அமைச்சர்கள் தனித்தனியே என 3 முறை நடந்...

திருப்பூர் அருகே கோர விபத்து... ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாப பலி!

Image
 ஊத்துக்குளி அருகே டீசல் டேங்கர் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்தில், காரில் பயணம் செய்த ஏழு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி. ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காரும் டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா, இவருடைய கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களது குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் பல்லடம் பகுதியில் உள்ள தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஒரே காரில் சென்றுள்ளனர்.  துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர்கள் மீண்டும் பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்திற்குத் தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களது கார் ஊத்துக்குளி அடுத்த காக்காபள்ளம் என்ற இடத்தை அடைந்தபோது, விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன...

"UGC அனுமதியோடு 3 தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு" -மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ்

Image
  "UGC அனுமதியோடு 3 தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால், இடஒதுக்கீட்டையும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் பின்பற்றாமல் 460 MBBS இடங்களை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடும் பின்பற்றப்படாது. இதுபோல மாநில அரசு அனுமதியின்றி அந்தஸ்து கிடைத்தால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே ஒரே தீர்வு. இருப்பினும் சட்ட நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசிடமும் முறையிடுவோம்’’ என மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்

அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு முன்பதிவு - Hi அனுப்பினால் OP சீட்டு..!

Image
  அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு முன்பதிவு வசதிக்காக `நலம் AI' என்ற Whatsapp Chatbot-ஐ தொடங்கிவைத்தார் அமைச்சர் அருண்ராஜ் 96192 22999 என்ற வாட்ஸப் எண்ணிற்கு Hi என்று அனுப்பினால் OP சீட்டு பெறும் வகையில் வசதி. அதேபோல மருத்துவ பரிந்துரைகள், ஆய்வக அறிக்கைகளையும் இதில் பெற்றுக்கொள்ள முடியும்

இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தமிழக அரசு மேல்முறையீடு.!

Image
  இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருந்தது

வாகன ஓட்டிகளை அலறவிடும் புதிய தானியங்கி டிரைவிங் டெஸ்ட் - 28 பேரில் ஒருவர் மட்டுமே பாஸ்!

Image
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் நடைமுறைக்கு வந்த ஒரே மாதத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற விரும்புவோர், முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறாரா என்பதை ஆய்வாளர் நேரில் பார்த்து உரிமம் வழங்குவது பழைய நடைமுறை. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் தானியங்கி கணினி மூலம் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2025 - 2026ஆம் ஆண்டு மோட்டார் வாகனத் திட்டத்தின் கீழ், ₹22.11 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் வாகனம் ஓட்டும்போது விளிம்புக் கோட்டில் மோதாமல் செல்லுதல், முன்னோக்கிச் செல்லுதல், நிறுத்துதல், சரியான பாதையில் இயக்குதல்...

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?

Image
  தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பகுதிகள் உள்பட பல இடங்களில் அதிகாாிகளிடம் அனுமதி பெற்றுதான் வளா்க்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதை பின்பற்றும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திாிந்து பல்வேறு விபத்துக்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கால்நடைகளை அதிகாாிகள் கண்டு பிடித்து கோசோலையில் அடைக்க செய்து சில சமயங்களில் அபதாரங்கள் விதிக்கப்பட்டு கடுமையான கண்டிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது  அதே வேலையில் மாநகராட்சி பகுதி முழுவதும் எல்லா பகுதிகளிலும் தெருநாய்கள் சொாிப்பிடித்தும் வெறிப்பிடித்தும் நாய்கள்உலா வருகின்றன இந்த நாய்களால் அதிகாலை பொழுது மாா்க்கெட்க்கு செல்லும் வியாபாாிகள் பால் மற்றும் நாளிதழ்கள் கொண்டு செல்பவா்களை பலரையும் விரைட்டி கடிக்கின்றனா். பலா் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நாம் கண்டறிந்துள்ளோம். அதற்கான தீர்வுகள் முழுமையாக கிைடக்க பெறாத நிலை தொடர்கிறது. பல சமயங்களில் சாலையை கடக்கின்ற போது ஏற்படும் விபத்துக்களாலம் உயிாிழ...

தூத்துக்குடியில் 20 வருட தனி நபர் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு - உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி உத்தரவு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து வந்தார் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து கொள்வார் இது தொடர் கதையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்ற பின்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று மாநகராட்சி சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததால் இதுபோல பலமுறை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததையடுத்து கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தை அதிரடியாக அகற்றியது. இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்பட்டது அதன்படி அந்த இடத்தில் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உடனடியாக அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.  இதனைய...

தூத்துக்குடி பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்.!

Image
தூத்துக்குடி பள்ளிக் கல்வித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி ெபறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்காக வயது வாரியான தடகளப் போட்டிகள் “விளையும் பயிர்” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் வட்டார வாரியாக 6 மையங்களில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்காக மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் செயின்ட் மேரிஸ் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  வட்டார அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்கும் இப் போட்டிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் அனைத்தும் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையிலும் நடைபெற்றன. போட்டிகளை தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி மற்றும் சென்மேரிஸ் கல்லூரி முதல்வர் ஷிபானா ஆகிய இருவரும் துவக்கி வைத்தனர். முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறுகையில் பள்ளி மாணவ மாணவிகளின் உடற்திறன் மற்றும் விளையாட்டுத் திறமைகளை இளம் வயதிலேய கண்டறிந்து அவர்களை ஒலிம்பிக் போட...

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Image
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பனிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்த பணி விரைவாக நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாதா கோவில் முன்பு நடைபெறுகின்ற பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் வரும் 26ம் தேதி  மாதா கோவில் திருவிழா ஆரம்பமாகிறது அதற்குள் விரைவாக பணியை முடிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் பேவர் பிளாக் கல் பதிக்கும் விபரங்களையும் கேட்டறிந்தார் பணிகள் முடிந்த பிறகு மேடு பள்ளம் இருக்கக் கூடாது காலி இடத்தில் இருக்கும் மணல்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார்.  பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டில் இருபுறமும்...

தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்.!

Image
  தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடிக்கு வருகை தரும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், பேரவை தலைவர் ஆகியோர் வருகை முன்னிட்டு டூவிபுரத்திலுள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தொழிற்சங்க வளர்ச்சி குறித்து அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விகுமார், தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நிலாச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன் நீதி பாலமுருகன் மண்டல துணைத் தலைவர் பார்வதி  வீரபாகு அன்பரசு பிரபாகர் உத்தரபாண்டி ஒலிமுத்து குமார் திருமணி பாலகுமார் வைரமணி ரத்தினமணி திருப்பதி ராம சின்னு உள்பட பலர் கலந்து கொண்டனா்.

சிஐடியு முயற்சியால் வ.உ.சி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் 56பணி நிரந்தரம்.!

Image
தூத்துக்குடி வ.உசிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் உணவு விடுதி ஊழியர்கள் 56 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை துறைமுக நிர்வாகம் இன்று 6.07.26 அன்று வெளியிட்டுள்ளது.  தற்போது பணியில் உள்ள 6 தொழிலாளர்கள் உள்ளிட்டு 56 தொழிலாளர்களை 28.07.1998 முதல் பணி நிரந்தரம் செய்து துறைமுக ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் உள்ளிட்ட ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடும் நோக்கில் துறைமுக குடியிருப்பில் உள்ள ஜனநாயக ஊழியர் சங்க அலுவலகத்தில் வழக்கால் பலனடைந்த 56 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சங்க தலைவர்களுக்கும், கடின நாட்களில் துணை நின்ற நீர்வழி போக்குவரத்து சம்மேளனம் மற்றும் சிஐடியு மாவட்டக்குழுவிற்கும் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து துறைமுக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வெற்றியை கொண்டாடியதுடன் நிரத்தரப்படுத்தும் உத்தரவு பிறப்பித்த துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் IRSEE, துணைத்...

"அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது" - உதயநிதி ஸ்டாலின்

Image
"அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.   நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்." - உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அவதி: பேட்டரி கார் இருந்தும் பயன்படுத்தப்படாததால் சர்ச்சை.!

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் நீண்ட தூரம் சிரமப்பட்டு நடந்து அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலக வளாகத்தில் பேட்டரி கார் இருந்தும் அது பயன்பாட்டில் இல்லையா? மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களை எளிதாக அணுகும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தகைய சம்பவம் சேவையின் செயல்திறன் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, பேட்டரி கார் சேவை முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, அலட்சியம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு பேட்டரி கார் சேவை எப்போதும் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..

தைவான் நாட்டில் கைது செய்யபட்ட இளைஞர் - ரூ.4 லட்சம் மோசடி? – மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார்.!

Image
  தூத்துக்குடி மாவட்டம், தேன்பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் இவர் தனது மகன் மணிகண்டனை  தைவான் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: எனது மகன் மணிகண்டன் (22), ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ளார். கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் செயல்பட்டு வரும் Subi Live Tech நிறுவனம், VMS Consultancy மூலம் தைவான் நாட்டில் தக்காளி பேக்கிங் வேலைக்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், தங்கும் வசதி மற்றும் உணவை நிறுவனமே வழங்கும் என்றும் விளம்பரம் செய்திருந்தது. இதனை நம்பிய எனது மகன் வேலைக்காக அணுகியபோது, அங்கு பணிபுரியும் சக்தி என்ற பெண், வேலை கிடைக்க ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து குடும்ப நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ.4 லட்சத்தை, 08.12.2025 அன்று நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கிற்கு அனுப்ப...

தூத்துக்குடியில் ஆட்டோ சங்க ஆண்டு விழா.!

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ெதாமுச இணைப்புடன் பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்க முதலாவது ஆண்டுவிழா தலைவர் சசிக்குமாா் செயலாளா் செல்வம், பொருளாளா் ஜான், முன்னிலையில் நடைபெற்றது.  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் உத்தரவிற்கிணங்க மாவட்ட மீனவரணி அமைப்பாளா் அந்தோணிஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.  விழாவில் ஆலோசகா்கள் ஜஸ்டின், யோகேஷ், சட்ட ஆலோசகா் மணிகண்ட ராஜா, உறுப்பினா்கள் இம்மானுவேல், தாமஸ், அந்தோணி ரமேஷ், ராஜா, சிலுவை அந்தோணி தொம்மை, சுரேஷ், பிரைட்டன், சந்தனகுமாா், மோகன்ராஜ், மைக்கேல் காலின்ஸ், தமிழ்செல்வன், ஜவஹா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத் துறை ஓட்டுனர்கள் சங்க புதிய தலைவர்- செயலாளர் தேர்வு.!

Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு  பழைய தாலுகா அலுவலக வளாகம்த்தில் உள்ள தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது, மாநில தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார்,இதில் மறைந்த இரண்டு உறுப்பினருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, தொடர்ந்து வரவு செலவுகள் வாசிக்கப்பட்டது, பின்னர் கடந்த செயற்குழு கூட்டத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ராஜினாமா செய்ததினால் புதிய மாவட்ட தலைவராக ஆ கனகராஜ்  ( ஊரக வளர்ச்சித்துறை) மாவட்ட செயலாளராக ஆ முருகேசன் ( கால்நடைத்துறை) என இருவரையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அனைத்து அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

"தூத்துக்குடிக்கு விஜய் வந்து சென்ற பிறகு மிகப்பொிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டது"- நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் ஸ்ரீநாத் பேச்சு.!

Image
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளை யொட்டி பூபால்ராயபுரத்தில் நடைபெற்ற நலத்்திட்ட உதவிகள் வழங்கும் விழா வடக்கு பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமாா் ஏற்பாட்டில் நடைபெற்றது.  மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் பேசுகையில் தமிழக முதலமைச்சா் விஜய் தமிழக மக்களின் இதயங்களின் குடியிருந்து வருகிறாா். தூத்துக்குடி மாவட்டத்திற்கு விஜய் வந்தபிறகு தமிழகம் முழுவதும் மிகப்பொிய எழுச்சி ஏற்பட்டது. நம்முடைய ஆட்சி உங்களுடைய ஆட்சி அன்பு நம்பிக்கை மூலம் மலா்ந்துள்ளது. மண்ணின் மைந்தன் மக்களாட்சியை யாராலும் எதுவும் செய்யமுடியாது மக்களாட்சி தொடரும் இந்த மக்களாட்சிக்கு எல்லோரும் விசுவாசமாக இருந்து வருகிறாா்கள். நானும் உன்மையாக உங்களோடு அண்ணன் தம்பியாக அக்கா தங்கையாக பாசத்தோடு பழகி உங்களுக்கு பணி செய்வேன். இந்த தேன்கூட்டை யாராலும் சேதாரம் படுத்த முடியாது அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்று பேசிய பின்னா் 25 பேருக்கு தையல் இயந்திரம், 800 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் ஸ்கூல்பக், மற்றும் சைக்கிள், சேலை, இஸ்திாிபெட்டி, எவா்சில்வா் ப...

காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் வீட்டிற்குள் கற்களை வீசிய நபர் கைது.!

Image
தூத்துக்குடி சிதம்பரநகர் 2வது தெருவில், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி என்பவர் வீட்டின் மீது கற்களை வீசிய டூவிபுரம் 4வது தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் கிறிஸ்டோபர் (56) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி சிதம்பரநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ஐஎன்டியுசி மாநில தலைவர் பி.கதிர்வேல். இவருடைய மகன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி. நேற்று (ஜூலை 3) இரவு சுமார் 10.40 மணி அளவில், பெருமாள்சாமி வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் திடீரெனக் கல் எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை. இச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 4) காலை 9.45 மணி அளவில் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி தனது கட்சித் தொண்டர்களுடன் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார். அங்குப் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் தரண்யாவிடம் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில், தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுச் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்...

"மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் " - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்

Image
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கைலாஷ் மஹாலில் மாநகர மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சுப்ரமணிய ஆதித்தன் கலந்து கொண்டார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்பியை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கும் மாநிலத் தலைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வது   பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தலைவரின் கொள்கையான அனைவருக்கும் சமமான கல்வி என்ற கொள்கையை சீர்குலைக்கு பொருட்டு மத்திய பாரதிய அரசால் கொண்டுவந்துள்ள நீட் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளை கண்டித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்துவது தேசிய மருத்துவ முகாமை தேர்வு வினாத்தாள் கசிந்து அதன் மூலம் மாணவ மாணவியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய அரசிற்க...

தூத்துக்குடி: தூய இம்மானுவேல் ஆலயம் முன்பு சபை மக்கள் ஆர்ப்பாட்டம்.!

Image
  தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் சேகரம், தூய இம்மானுவேல் ஆலயத்தில் சபை மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 09.11.2025 அன்று நடைபெற்ற சேகர மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆபிரகாம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை ஏற்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்படுவதை தடுக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலுக்கு முன்பு அவர்கள் நிர்வாகத்தில் இருந்த 13 மாத காலத்தில் சபை மக்களின் காணிக்கை, பண்டிகை வரி, ஆசன நன்கொடை, ஆண்டு சந்தா உள்ளிட்ட தொகைகள் வசூலிக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கான வரவு-செலவு கணக்குகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அந்தப் பணம் சேகர வங்கி கணக்கிலும் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த 2012-ம் ஆண்டு முதல் சேகர அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், வரவு-செலவு பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ...

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.!

Image
  தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

Image
  தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தூத்துக்குடியிலிருந்து தாம்பரத்திற்கு (வ.எண்.06018) ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு (வ.எண்.06017) ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 3:40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலானது தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கைகள் மனு!

Image
  தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் ஃபைபர்படகு மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜன் அவர்களிடம் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வணிகக் கப்பல்களால் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் வலைகள் மற்றும் வள்ளங்கள் சேதமடைவதைத் தடுக்க வேண்டும் என்றும், கடலோரக் கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க உடனடியாகத் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொகுதி வரையறையில் மீனவர் கிராமங்களுக்கு (மண்டல கமிஷன் 1990 பரிந்துரைகளில்) பஞ்சாயத்து ராஜ்ஜியம் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையோடு, கடலோர இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

"அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எஃகு கோட்டையாக இருந்து வருகிறது" - அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தகவல்.!

Image
தூத்துக்குடி தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு சென்றது. இதனால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.  முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், ஆனந்தன், திருச்சி வளர்மதி உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து அதிமுகவில் இருந்து பலர் விலகி தவெகவில் இணைந்து வருவது குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச்செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில், அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டு, உருவாக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த தலைவர்கள் இன்று அக்கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு பதவி சுகத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தங்கள் சுயலாபத்திற்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் கூறவேண்டும் என்பதற்காக அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றது என்றும், எடப்பாடி பழனிச்சாமி கட்சியை சரியான வழிநடத்தவில்லை என்றும் க...

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய கிணறு ஒன்றினை அமைத்து மேலும் அந்த கிணற்றில் தானியங்கி நீர் மீட்டர்களும்  பொருத்தப்பட உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பேருந்து நிலைய சுகாதார வளாகங்களில் நீர் கிடைப்பதற்காக பொருத்தியுள்ளனா். பின்னா் ேமயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகாிப்பு 2 3 சக்கர வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலம் பயனாளிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா். அதற்கு ேதவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் கழிப்பிட வசதிகள் மற்றும் அதே மாடியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி புறக்காவல் நிலையமும் செயல்படுகிறது. அதற்குாிய குடிதண்ணீா் வசதியும் செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அனைவருடைய நன்மையை கருதி புதிய கிணறு ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் எந்தநேரமும் தண்ணீர் எடுத்து தட்டுபாடு இல்லாத வகையில் பயன்படுத்தி...

அனிதா ராதாகிருஷ்ணனை சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஜாமினில் விடுவிப்பு.!!

Image
CM விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்ற காவல் மறுப்பு பிணை தொகையாக ரூ.10,000 செலுத்திவிட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு. திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து ,பத்து நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக இன்று காலையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அதை தொடர்ந்து திருச்செந்தூர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் ஆஜரானார். அரசு தரப்பு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு என இரு தரப்பினரும் காரசாரமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர். மேலும் அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி திருச்செந்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் நீதி வென்றதாக செய்தியாளர்களிடம் த...

“ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு மாநில உரிமைகளை Compromise செய்துள்ளது தவெக அரசு”.. உதயநிதி காட்டம்!

Image
  "ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்." என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையருடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த செயலை எதிர்க்கட்சியான திமுக கண்டித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், போலீசார் தன்னை ராஜினாமா செய்ய சொல்லி நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டு.!

Image
  முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக தவெக கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் “எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி போலீசார் நெருக்கடி தருகிறார்கள். தவெகவில் சேரச்சொல்லி நிர்பந்திக்கிறார்கள். நான் ராஜினாமா செய்ய மாட்டேன். திமுகவில் உறுதியாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

Image
முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு தமிழ் நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோபாமாடல் அரசு. அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று கூறப்பட்டுள்ளது.

தூய மரியன்னை கல்லூரியில் பேரவைத் தேர்தல் - வரலாற்றுத்துறை மாணவி தலைவியாகத் தேர்வு!

Image
  தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் சி.ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி இந்தத் தேர்தல் நடைமுறைகளை முறைப்படி தொடங்கி வைத்தனர். இத்தேர்தலில் கல்லூரியைச் சேர்ந்த 1,130 மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, தங்களது வாக்குகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக ஆர்வத்துடன் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தூய மரியன்னை கல்லூரியின் புதிய மாணவர் பேரவைத் தலைவியாக பிரியதர்ஷினி (மூன்றாமாண்டு, வரலாற்றுத்துறை) தேர்வு செய்யப்பட்டார். சுயநிதிப்பிரிவில் பொன் செல்வி (வணிகவியல் துறை) தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.  செயலர்களாக கேத்தரின் லியோ (மூன்றாமாண்டு, கணிதவியல்துறை), லியாண்ட்ரா ஃபேனிடா (வணிக மேலாண்மைத் துறை), துணைத் தலைவர்களாக பிரின்ஸி ஸ்னோஸ்லின் (மூன்றாமாண்டு, வணிகவியல் துறை), அனுஷ்யா (மூன்றாமாண்...

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு.!

Image
  தூத்துக்குடியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், தொடர்புடைய இருவருக்குத் தலா ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில், முன்விரோதம் காரணமாக மோகன் (32) என்பவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாகப் புலனாய்வு மேற்கொண்ட தென்பாகம் காவல் நிலைய போலீசார், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செலிஸ்டின் குமார் (38), அவரது தம்பி மனோ என்ற மனோ குமார் (33), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற நாகராஜ் (37) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மனோ என்ற மனோகுமாரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரம், முதன்மைக் குற்றவாளிகளான செலிஸ்டின் குமார் மற்றும் ராஜ் எ...

தற்காலிக நடத்துனருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.!

Image
  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு தற்காலிக நடத்துநர் ஸ்ரீ தம்பிதுரை தனது பணி தொடர்பான பிரச்சினையை தெரிவித்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீதம்பிதுரை தென்காசி பணிமனையில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை பொது மேலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்ரீ தம்பிதுரை மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்ற 6 பேர் கைது- 6½ கிலோ கஞ்சா பறிமுதல்.!

Image
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனை செய்த சாத்தூரை சேர்ந்த அழகர்சாமி மகன் மீனாட்சி சுந்தரம் (25), சம்சுதீன் மகன் செய்யது அப்ரலி (20), நேதாஜி நகர் சண்முகவேல் மகன் ஆனந்த் (25), போல்பேட்டை ராமர் மகன் பாலசுப்ரமணியன் (24), ஸ்டேட் பாங்க் காலனி, சித்திரை மகன் தனராஜ் (27) மற்றும் கணேசன் மகன் பிரவின் (23) ஆகிய 6 பேர் கைது அவர்களிடம் இருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை வடபாகம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்