அம்பேத்கர் சிலைக்கு செயற்கை நீரூற்று அமைத்து தருமாறு கோரிக்கை.!
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை, நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்டீபன் ஜெயராஜ், கௌரவ தலைவர் துரை, கௌரவ ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் உள்ள (தென் பாகம் காவல்நிலையம் அருகில்) அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைந்துள்ள வளாகத்தில் செடிகள் வைத்து பராமரிப்பதற்காக தண்ணீர் வசதி வேண்டியும், அலங்கார நீரூற்று ஒன்றும் அமைத்துத் தருமாறு நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.
நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை, விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர் உறுதி.
அம்பேத்கர் சிலை வளாகத்தில் தற்போது செடிகள் வைப்பதற்காக தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். மேலும் வரும் நாட்களில் செயற்கை நீரூற்று ஒன்றும் நேர்த்தியாக இந்த வளாகத்தினுள் அமைத்து தருகிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்க நிர்வாகிகள் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்து நன்றி கூறிக் கொண்டனர்.
