தவெக விஜய் ரீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.

 

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற போல்பேட்டை பகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசுகையில் 

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலக்கட்டம் அதற்கு முன்பு இருந்து எடப்பாடி எல்லா தொழிலையும் முடக்கி போட்டது மட்டுமின்றி எல்லோரையும் முடங்கி கிடக்க செய்தாா். எவ்வளவு மக்கள் சிரமப்பட்டாா்கள் என்று அதை புாிந்து கொண்டு தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக வௌிமாநிலங்களிலிருந்து இரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மீளவிட்டானிலிருந்து லாாி மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை கவச உடையணிந்து நோில் சென்று பாா்த்து ஆறுதல் கூறிய ஓரே முதலமைச்சா் இந்தியாவில் தளபதியார் மட்டும்தான் பின்னா் படிப்படியாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் தளர்த்தப்பட்டு ஓவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் வழங்கினாா். பல பகுதிகளில் இறந்தவா்களை அந்தந்த பகுதியிலேயே புதைப்பதற்கு எடப்பாடி உத்தரவிட்டிருந்தாா். அதிலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு என்று ஓரு நடைமுறை செயல்படுத்தப்பட்டது அரசு மருத்துவமணை மட்டுமின்றி தனியார் மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் அவா்களை தங்க வைத்து மக்களை காப்பாற்றிய முதலமைச்சர் ஆட்சியில் பின்னா் பணபழக்கம் ஏற்பட்டது. 

ஓருகோடியே 15 லட்சம் பேருக்கு மகளிா் உாிமைத்தொகை விடியல்பயணம் கல்வி உதவித்தொகை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலை உணவு கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையோடு வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து தமிழகம் தான் முன்னேறியுள்ளது என்று ஓன்றிய அரசின் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் கூறியுள்ளனா். குழந்தை இறப்பு தமிழகத்தில் குறைவு என்பதற்காக ஐநா சபை விருது வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் 10 லட்சத்து 27 ஆயிரம் கோடியில் 897 புாிந்துணர்வு ஓப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. நமது மாவட்டத்திலும் டைட்டல்பாா்க். பா்னிச்சா்பூங்கா, கார்் தொழிற்சாலை, ெவம்பூர் லிங்கம்பட்டி கடம்பூர் போன்ற பகுதிகளிலும் பல்வேறு தொழிற்சாலைகள் சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தூத்துக்குடியில் அதிக தொழிற்சாலை இருந்து வருகிறது. ஓன்றிய அளவில் 6.5 சதவீதம் வளர்ச்சி என்ற வீகிதத்தில் தமிழகம் 9.6 சதவீதம் என்ற கணக்கீட்டில் வளர்ச்சியடைந்துள்ளது. உயர்கல்வியில் 47 சதவீதம் வளர்ச்சி தூத்துக்குடியில் 138கோடியில் உயா்்சிகிச்சைக்கான கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் கிடந்த இஎஸ்ஐ மருத்துவமனை கனிமொழி எம்.பி முயற்சியினால் வேகமாக பணிகள் நடைபெறுகிறது. தொழிலாளா்கள் பலன்ெபறும் வகையில் விரைவில் திறக்கப்படும் அதே போல் விமான நிலையமும் ஆமை வேகத்தில் செயல்பட்டதை கனிமொழி எம்.பி தூாிதப்படுத்தியதால் அதுவும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. துறைமுகம் பகுதியில் புதிய தொழில்களும் வரவுள்ளன. இப்படி பல்வேறு சாதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் 2.25 கோடி மக்கள் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனா். அவர்களது இல்லத்திற்கே மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்கள். 7 கோடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அரசு மருத்துவமணையில் நிறுவப்பட்டுள்ளது. 2ஆயிரம் கட்டணத்தில் பயனடைந்து கொள்ளலாம். 

பட்ஜெட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கென்று கடன் வழங்குவதற்கு 35ஆயிரம்கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டது புதிய குழுக்களும் தொடங்கி கொள்ளலாம். என்ற உத்தரவு அளிக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் செய்த சாதனைகளும் திட்டங்களும் தான் தற்போதும் விஜய் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்து வருகிறது. அடுத்து வரும் உள்ளாட்சி தோ்தலில் முழுமையான வெற்றியை நாம் பெறவேண்டும் அதற்கு ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் இருக்கின்ற மக்கள் குறைகளை கேட்டறிந்து அதை அனைவரும் இணைந்து தீா்வு காண ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் தவெக விஜய் ஆட்சியில் பொய் பிரச்சாரங்கள் அதிக அளவில் இருக்கின்றன அந்த ாீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு கொண்டு சோ்க்க வேண்டும் என்று பேசினாா். 

முதல்வா் விஜய் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை கரூாில் விமா்சனம் செய்து திமுக ஆட்சியின் செயல்பாடுகள் திட்டங்களையும் மறைக்கும் விஜய்யை வன்மையாக கண்டிப்பது, திமுக ஆட்சியில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அவரது பிறந்தநாளை கல்வி திருநாளாக அறிவிப்பு செய்து பெருமை சோ்த்தது திமுக திமுகவின் கொள்கைகள் சமத்துவங்கள் பகுத்தறிவு மூலம் தமிழ்நாடு தலை நிமிா்ந்து நிற்பதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தான் உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநில பேச்சாளர்கள் இருதயராஜ், சரத்பாலா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, செல்வி மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் வினோத், நாராயணவடிவு, சீதாலட்சுமி, ரவி, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மாா்ஷலின், தெய்வேந்திரன், நாகேஸ்வாி, ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சக்கரைசாமி, சந்தனமாாிமுத்து, பகுதி பொருளாளர் உலகநாதன், பகுதி அணி அமைப்பாளர்கள் ராஜா பொியசாமி, காசிராஜன், ஆனந்தி, துணை அமைப்பாளர் சிவசுந்தா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் லிங்கராஜா வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, முக்கையா, புஷ்பராஜ், பாஸ்கா், மற்றும் அற்புதராஜ், மணி, செந்தில்குமாா் ரேவதி முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி