கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு.!

 

தூத்துக்குடியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், தொடர்புடைய இருவருக்குத் தலா ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில், முன்விரோதம் காரணமாக மோகன் (32) என்பவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாகப் புலனாய்வு மேற்கொண்ட தென்பாகம் காவல் நிலைய போலீசார், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செலிஸ்டின் குமார் (38), அவரது தம்பி மனோ என்ற மனோ குமார் (33), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற நாகராஜ் (37) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மனோ என்ற மனோகுமாரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதேநேரம், முதன்மைக் குற்றவாளிகளான செலிஸ்டின் குமார் மற்றும் ராஜ் என்ற நாகராஜ் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா ஆயுள் தண்டனையும், தலா 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி