ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியுடன் அதிகாரி கூட்டு : பொய் வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது? - நடந்தது என்ன.?
சென்னை பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி (43). கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேர் புரோக்கர் அகில்குமார் என்பவரை ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி ஏற்கனவே ரூ.40 லட்சம் வாங்கியதாகவும், மேலும் ரூ.5 லட்சம் தரும்படி தற்போது மிரட்டியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'அகில்குமார் ஷேர் மார்க்கெட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர் 2ம் நம்பர் தொழிலும் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்ட வக்கீல் மொட்டை கிருஷ்ணன் என்பவரது செல்போனில் தொடர்ந்து அகில் குமார் பேசி வந்துள்ளார். மேலும் மொட்டை கிருஷ்ணனுக்கு, சிம்கார்டும் அவர்தான் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை போலீசார் அப்போது விசாரணை நடத்தி அனுப்பியுள்ளனர். அகில்குமாரை, ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கின் ...