தூத்துக்குடி: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த ஓட்டுநர் கைது.!
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் நியூட்டன் மற்றும் போலீசார் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தையடுத்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி பஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆம்னி பஸ் டிரைவரான திருநெல்வேலி, பத்தமடை பகுதியைச் சேர்ந்த சங்கரன் மகன் பாலமுருகன் (42) என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
