அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்.!
தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் தமிழக முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேட்டது கப்பல் மாலுமிகள் சட்டத்தில் உள்ள படி உரிய இழப்பீடு மற்றும் கடந்த காலங்களில் தமிழக அரசுகளால் வழங்கப்பட்டு வந்த மாநில அரசுப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்க்கு நிரந்தரப் பணி. ஆனால் நீங்கள் தந்திருப்பதாகச் சொல்லி எங்களை ஏமாற்றி விளம்பரப்படுத்தி இருப்பதோ தற்காலிக ஒப்பந்த பணி ஆணை இந்த அரசுக்கு மீனவர்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பும் சில அதிகாரிகள் மாலுமி நிஷாந்த் குடும்பத்திற்குத் துரோகம் செய்து இதைச் செய்ய விரும்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தயவு செய்து மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கின்றோம்.
கடலோடிகள் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நீங்கள் கடலோடி மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்த் குடும்பத்துக்கு வழங்கிய தற்காலிக ஒப்பந்த பணி ஆணையைத் திரும்பப் பெற்று தம்பி நிஷாந்தின் மனைவிக்கு மாவட்ட வருவாய்த் துறையிலோ அல்லது மீனவர் துறையிலோ நிரந்தரப் பணி ஆணையை உடனடியாக வழங்குங்கள் என்று நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கேட்டுக்கொண்டுள்ளனா்.
