தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி.!

 

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்றபோது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகைகளில் மாநகரம் பாதிக்கப்பட்டிருந்தது குடிநீர் பிரச்சனை என்பது தூத்துக்குடி மாநகரில் தீர்க்க முடியாத பிரச்சனையாகவே இருந்து வந்தது. மாநகராட்சி அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனை நூறு சதவீதம் தீர்க்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது சில பகுதிகளில் மட்டும் தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதுதான். மாநகராட்சியின் குறிக்கோள் அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து வந்தனா்.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாடு. அகரம். கலியாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வரம் 2 3 வது உரக்கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் முற்றிலும் சேதம் அடைந்தது. அதனை கடந்த இரண்டு வருட காலமாக பராமரிப்பு மற்றும் பழுது பணிகள் பார்க்காமல் இருந்து வந்த நிலையில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரிகளுடன் பல்ேவறு கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 3 வது உரக்கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் சுமார் 20 கோடியில் முற்றிலும் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகரில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக 37 நீர்நிலை தொட்டி உள்ளது அதில் நீரேற்றம் செய்து அந்தத் தொட்டி மூலம் தான் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வல்லநாடு அகரம் பகுதியில் இரண்டாவது குடிநீர் பைப் லைன் உரைக்கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் 20 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு குடிதண்ணீா் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார். 

அப்போது வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் முற்றிலும் குறைவாக உள்ளது இருந்தாலும் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர மக்களுக்கு எந்த விதமான தங்கு தடையின்றி  கோடைகாலத்தில் கூட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பொியசாமி சில உத்தரவுகளை பிறப்பித்தார். 2வது பைப்லைன் உரக்கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது இன்னும் சில தினங்களில் அந்த பணிகள் 100% முடியும் என்று  தெரிவித்துள்ளார். அதுபோல 3 உரக்கிணறு பைப் லைன் பம்பிங் ஸ்டேஷன் பணிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளும் முடிவடைந்து விடும். 

இதுகுறித்து மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகர் மக்கள் மாநகராட்சி மேயராக நான் பதவியேற்பதற்கு முன்பு குடிநீர் பிரச்சனையால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தனர் நான் பதிவேற்ற பின்பு படிப்படியாக குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு உள்ளது தற்போது மாநகரில் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது மாநகருக்கு குடிநீர் வரும் 1.2.3.4. ஆகிய பைப் லைன்கள் முழு அளவில் இயங்கும் பொழுது தூத்துக்குடி மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் அதுதான் எனது இலக்கு அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் 2 3 வது குடிநீர் பைப் லைன் பம்பிங் ஸ்டேஷன் உரக்கிணறு முற்றிலும் சேதம் அடைந்தது தற்போது நவீன வசதிகளுடன் முழு அளவில் புதுமையாக முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது சில தினங்களில் அந்தப் பணிகள் முடிவடைந்து விடும் அதன் பின்பு தற்போது மாநகரில் சில வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அந்த வார்டுகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்படும் முதல் கட்டமாக மாநகரில் உள்ள 10 வார்டுகளுக்கு ஒரு சில தினங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் அதன் பின்பு சில மாதத்தில் அனைத்து வார்டுகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது இலக்கு அந்தப் பணியை தொடர்ந்து செய்வேன் என்று கூறினார்.

     ஆய்வின் போது மாநகர பொறியாளர் திலகா. இளநிலைபொறியாளா் செல்வம், உதவி பொறியாளர் லெனின். குடிநீர் விநியோக கண்காணிப்பாளர்கள் ஆறுமுககுமார். பாலசுப்பிரமணியன். மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ். மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார். திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன். கவுன்சிலா் கனகராஜ் ஆணையாின் உதவியாளர் துரைமணி மேயாின் உதவியாளா் ரமேஷ் உள்பட பலா்  கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி