ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வருக்கும் நந்திக்கும் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தாா். தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
