சென்னை சாலையில் திடீர் பள்ளம்: பரபரப்பு

ஆலந்தூர் பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு சென்னை நங்கநல்லூர் பிரதான சாலையில் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் கழிவு நீர் உடைப்பு ஏற்ப்படு இருந்த சாலையில் தற்போது திடீரென 10 அடி அகலத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்டு அப்பகுதி மக்களும்,வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளத்தை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது அந்த சாலையில் அப்பகுதி மக்களே தடுப்புகள்,கற்க்கள் அமைத்து சாலை மூடியுள்ளனர்.இதனால் அவ்வழியாக செல்லகூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. [17:18, 09/12/2020] Ta Gudiyatham Vengatesh: கிராமங்களில் உள்ள பயனாளிகளை தேடிச்சென்று விசாரணை நடத்தி உடனடியாக பழங்குடியினர் மற்றும் இருளர் சான்றிதழ்களை வழங்கும் குடியாத்தம் கோட்டாட்சியர். ...