Posts

Showing posts from February, 2025

சிவலிங்கம் வடிவில் விழுந்த தேங்காய்... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பொதுமக்கள்!

Image
 பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில் திடீரென தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் வடிவில் இருந்ததால் வியந்துபார்த்து   பாலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து வழிபட்ட பொதுமக்கள் தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் கீழத்தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று இரவு சிவன் ராத்திரியை முன்னிட்டு இந்த கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிசயம் நடந்தது.  அந்த கோயில் வளாகத்தில் உள்ள  தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு தேங்காய் கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த தேங்காயை பார்க்கும்போது அச்சு அசல் சிவலிங்கம் வடிவில் இருந்துள்ளது. உடனே அங்கிருந்த பக்தர்கள் சிவன்ராத்திரி அன்று இதுபோல் சிவபெருமான் நமக்கு காட்சியளிக்கிறார் என்று சிவலிங்கம் வடிவில் இருந்த தேங்காயை எடுத்து வைத்து சிவனாக நினைத்து வழிபடத் தொடங்கினர்.  இந்த செய்தி அருகில் உள்ள பொதுமக்களுக்கும் பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒன்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவலிங்கம் வடிவிலான தேங்காய்க்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ததுட...

தேசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி!

Image
இந்திய தடகள க்  கூட்டமைப்பின் சார்பில் , 38 வது தேசிய அளவிலான  விளையாட்டு ப்போட்டிகள் ,  உத்தரகாண்ட் மாநிலம் ,  டேராடூன்-ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் ஸ்டேடியத்தில் ,  கடந்த பிப் ரவரி மாதம்    8 ம் தேதி முதல்  12 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் வீரர்கள் ,  வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர்.   நமது திருப்பூர் , ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப்  வீராங்கனை  S.K. ஸ்ரீவர்த்தனி , மகளிர்  பிரிவின் , 400 மீ தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று ,  வெள்ளிப்பதக்கம்   வென்று பெருமை சேர்த்துள்ளார். ஓட்ட தூரத்தை  59.86  நொடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.  இந்த வெற்றியானது இந்திய தடகளக் கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்திய அளவில் முதல் 16 தரவரிசையில் உள்ளவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்றுப் பதக்கம் வெல்வது இது முதன்முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டி  இந்திய ஒலிம்பிக் போட்டிகள் ...

பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி... 21 பேர் படுகாயம்!

Image
திருப்பூரில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தார்கள்.  இந்த நிலையில் இந்த பேருந்து கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம்  வரும்போது, ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்தது.  இதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களான பெரியசாமி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தவிர 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  படுகாயம் அடைந்த அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.   இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான ப...