ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு -CPM தொடர்ந்த வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு -CPM தொடர்ந்த வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஎம் தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணையின் " status report " சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் ஆகவே கூடுதல் அவகாசம் தேவை எனவும் அதில் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கில் CPM கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனனின் கோரிக்கையை ஏற்று வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப...