Posts

இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு : 2024–2025 நிதியாண்டில் 16% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்.!RBI வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் தகவல்.!

Image
  2024-25 நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 16% வளர்ச்சியைப் பெற்று பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. RBI வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில், கர்நாடகா, உ.பி., மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனையில், 2024–2025 நிதியாண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் அடிப்படையில், அனைத்து இந்திய மாநிலங்களுக்கிடையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது . 16% வளர்ச்சி விகிதத்துடன் , நாட்டின் வேகமாக வளரும் மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது . பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் இந்த வளர்ச்சி பல துறைகளில் மாநிலத்தின் வலுவான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது, அவற்றுள்: · தொழில்கள் மற்றும் உற்பத்தி · தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் · விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள் · புதுப்பிக்கத்தக்க ஆற்றல் · உள்கட்டமைப்பு மேம்பாடு · வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அடித்தளமும், நிலையான கொள்கை ஆதரவும் இந்த வளர்ச்சியை ...

தூத்துக்குடி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் பணி நிரந்தரம்- 26 ஆண்டு கால வழக்கில் வெற்றி தேடி தந்த வழக்கறிஞர்களுக்கு சிஐடியு பாராட்டு.!

Image
  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் துறைமுக புராஜெக்ட் ஆக துவக்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை இயங்கி வரும் துறைமுக கேண்டீனில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 56 பேர் தங்களை துறைமுக ஊழியர்களாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1998-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து தொழிலாளர்களை பின் ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு நீதியரசர் சிவசுப்பிரமணியன் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து துறைமுக நிர்வாகம் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு 2007-ல் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 11 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்கு பின்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2019-ல் திருப்பி அனுப்பியது....

தூத்துக்குடி:14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!

Image
  தூத்துக்குடி - மீளவிட்டான் தண்டவாளத்தில் இணைப்புப் பணி காரணமாக தூத்துக்குடியில் வருகிற 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை வருகிற 14ம் தேதி முதல் 23வரை தண்டவாளத்தில் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரையிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி வரையிலும், மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் மணியாச்சி வரையிலும், ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் பெரியசாமி.!

Image
  தூத்துக்குடி : தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் 149வது பாகத்தில் வாக்குசாவடி முகவா்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வாா்டுக்குட்பட்ட அனைத்து வாக்காளா்கள் பெயரும் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்ட பின் அதில் பெயா் எதுவும் விடுபட்டிருந்தால் பின்னா் நடைபெறும் சோ்க்கையில் முழுமையாக சோ்த்திட வேண்டும். என்று ஆலோசனை வழங்கினார். பின்னர் அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில்:- தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு நாம் செய்துள்ள திட்டங்களை முழுமையாக எடுத்து சொல்ல வேண்டும். விடியல் பயணம் மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டம் இரண்டு தினங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்....

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை.

Image
  மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு சார்பில்  அமைச்சர் பி.கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்.  மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்  ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கல், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, வட்டாட்சியர் சுபா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-வது மாநில மாநாடு நாளை தூத்துக்குடியில் தொடங்குகிறது.!

Image
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் வெளினிஸ்ட்) 12-வது மாநில மாநாடு டிசம்பர் 12,13,14 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.  இது குறித்து நேற்று தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஐ - எம்.எல் தூத்துக்குடி மாவட்ட செயளாளர் மு. முருகன் அளித்த பேட்டியில் "டிசம்பர் 12 வெள்ளி) அன்று அரங்கில் (ஆண்டாள் தெரு), ஸ்டெர்லைட் தியாகிகள் நகரில் பொது மாநாடு காலை 10 மணி அளவில் துவங்கி நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதிலுமிருந்து ஆபிரம் பேருக்கு மேற்பட்ட தொண்டர்கள், செயல்வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திபங்கர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், சமூக நலம், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்,மக்களலை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மக்கள் அதிகாரம் அமைப்புச் செயலாளர் திருச்சி செழியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் எஸ்,ஐ,ஆர், தொழிலாளர் ...

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... அதே வேளையில் தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகோள்.

Image
  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். முன்களப் பணியாளர்கள்   பத்திரிகையாளர்கள் அன்றாட உலகச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடுவதோடு, அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும், பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் எனப் பாராது ஓய்வின்றிப் பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். பத்திரிகையாளர்களின் இத்தகைய பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த...