Posts

சிறுமிக்கு ரத்தப்புற்றுநோய்... வேதனையில் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை!

Image
 கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம், நெடுஞ்சாலையில் உள்ள பிரஸ் காலனி, சாந்தி மேடு பகுதியில் உள்ள தம்பு நகரில் வசித்து வந்தவர் கமலேஷ் (48). இவர் கதிர் நாயக்கன்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இலக்கியா (45) செவிலியராக பணியாற்றியவர். இவர்களுக்கு எக்சிதா ஏஞ்சேல் (10) என்ற மகள் உள்ளார். வீரபாண்டி பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இலக்கியா நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனால் பலனளிக்காத காரணத்தினால் வருத்தமுற்ற கணவன், மனைவி இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களுடைய மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தாங்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து திங்கள்கிழமை காலை அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் மூவரது சடலங்களை மீட்டு கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவுகளின் சிறப்பு பாரத நாட்டுக்கு பெருமை... ஆர்.எஸ்.எஸ். கருத்தரங்கில் பேச்சு

Image
 உறவுகளின் சிறப்பு பாரத நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் குடும்ப வாழ்வியல் சம்பந்தமான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் பேச்சு. ஆர்‌.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி தைப்பூச திருநாளை  முன்னிட்டு பெருமாநல்லூர் ரோடு சிறுபூலுவாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.இந்த கருத்தரங்கில் நோக்கமாக  ஹிந்து தர்மத்தில் பெண்களின் பெருமை, நமது தேசத்தின் இறையாண்மை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு, மேலும் குடும்ப வாழ்வியல் குறித்தும், முருகனின் பெருமை குறித்தும் பொது மக்களிடையே உரை நிகழ்த்தினர். முருகன் குறித்து பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபாலகுமார் ,ராஜராஜன், மனோஜ் குமார், சிவக்குமார் ஆகியோர் குடும்ப வாழ்வியல் குறித்து பொது மக்களிடையே உரையாற்றினர்.  மேலும் மேலும் குடும்பம் என்பது சுமை அல்ல அது ஒரு உறவு என்றும் நாம் அனைவரும் இந்த பாரத தேசத்தில் உறவுகளால் பெருமைப்பட்டு உள்ளோம், அனைவரும் குடும்பத்தோடு கூடி வாழ வேண்டும் நமது முன்னோர்...

மத்திய பட்ஜெட்டுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு

Image
 திருப்பூர்: மத்திய பட்ஜெட் சிறுகுறு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் பட்ஜெட் என ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 9வது முறையாக இந்தியாவிற்கான நிதி நிலை அறிக்கை  தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுஇது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நிர்வாகிகள் பேசுகையில்,  ஆயத்த ஆடை துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு 7 லட்சம் கோடி , அப்பேரல் டெக்ஸ் பார்க் அமைக்கவும், செயற்கை நுண்ணிழை தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு, மகளிர் விடுதி போன்றவை அறிவித்துள்ளனர். உட்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை கண்டெய்னர் உருவாக்கத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனி கவனம் செலுத்தி வரி தளர்வு, வட்டி மானியம் கேட்டிருந்தோம். ஆனால் அவை...

திருப்பூர் முத்தணம்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்!

Image
 குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்படும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.  திருப்பூர் முத்தனம் பாளையம் அடுத்த  ரங்கையன்கவுண்டம் பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் பணிக்குச் செல்லவும் பள்ளி கல்லூரி கோவில் என அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பயன்படுத்தும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க  புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு  அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் தள்ளப்படுவார்கள் என குற்றச்சாட்டு தெரிவித்து டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் கடை முன்பாக முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதே பகுதியில் கடந்த ஐந்தாண்டுக...

கறிக்கோழி பண்ணையாளர் கூலிஉயர்வு பிரச்சினைக்கு அதிமுக ஆட்சி அமைந்ததும் தீர்வு: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேட்டி

Image
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொங்கலூர் பஸ் ஸ்டாப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.45 லட்சத்தில் பிரம்மாண்ட நிழற்குடை அமைக்கும் பணிகளை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர், பொங்கலூர், பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பு தொடு திரைகளை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அமைத்துக் கொடுத்து அந்த வகுப்புகளை  மாணவர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.  அப்போது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மாணவர்கள் பயன்படும் வகையில் 15 ஸ்மார்ட் வகுப்புகள் பேருந்து நிறுத்தம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைத்து தரப்பட்டுள்ளது.  கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தொடர்ந்து கூலி உயர்வு கேட்டு போராடிவரும் நிலையில் திமுக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த முறை அதிமுக ஆட்சியில் தான் அப்போது கால்நடைத்துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில்...

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு : தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Image
  தூத்துக்குடியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றம் செய்வதை நிறுத்துமாறு  மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். மேலும்,பழைய நடைமுறைகளையே தொடர வேண்டும் என்றும், புதிய நடைமுறைகளால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் வலியுறுத்தினர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மாவட்ட செயலாளர் கோபால், மண்டல தலைவர்கள் சேகர் எஸ்பி ராஜன், செந்தூரப்பாண்டி, ஐசன்செல்வா, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பிரீத்தி வினோத், காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து ராஜா, ஜெயஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்

மதுபோதையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்டு: எஸ்பி சிலம்பரசன் நடவடிக்கை!

Image
  பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரன் நடவடிக்கை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீசார் பணியின் போது, கவனமாகவும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத வகையில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று எஸ்பி சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.  இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பணியில் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் ஏட்டு அண்ணாத்துரை, குளத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், முத்தையாபுரம் ஏட்டு தனுஷ்கோடி ஆகியோர் மீது எஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  இதில் அந்த 3பேரும் பணியில் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி சூப்பிரண்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் அந்த 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இது தூத்துக...