நெல்லை அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 


நெல்லை பிப் 20


களக்காடு காவல் நிலையத்தில் உள்ள வழக்கில் சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர்களான சுரேஷ்(22) , மற்றுமாெரு சுரேஷ் (18), பவித்ரன் (19), மணிகண்டன் (22) ,சுரேஷ் (20) ஆகியோர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா  கவனத்திற்கு வந்தது.


இதையடுத்து 5 பேரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா அறிவுறுத்தியதன் பேரில், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில், சுரேஷ், மற்றொரு சுரேஷ், பவித்ரன், மணிகண்டன், முத்துசுரேஷ், ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர்


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி