டிரைவரை கொல்ல நடந்த களேபரம்: அரிவாளால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி அழிச்சாட்டியம்

முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி நாட்டு வெடிகுண்டு வீடி ஓட்டுநரை கொல்ல முயற்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. 



சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர் சந்திப்பில் நேற்றிரவு ஓட்டுநர் முத்து செல்வம்(35) என்பவரை ராஜேஷ் மற்றும் அவருடன் வந்த மூன்று பேர் முத்து செல்வத்தை வழிமறித்து சரமாறியாக வெட்டிவிட்டு முருகாவை எதிர்த்து நீ ஊர்ல வாழ முடியுமா எனக் கூறி தலையிலேயே பெட்டியுள்ளனர். பின்னர் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் முத்து செல்வத்திற்கு இடதுபக்க காது, கழுத்து, கை, கைவிரல்கள், வலது கால், இடது கால் என பல்வேறு இடங்களில் காயமேற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


பள்ளிகரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். 


முதற்கட்ட விசாரணையில் அதிமுகவை சேர்ந்தவர் முருகம் என்பதும் பாதிக்கப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் அதன் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தகவல்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி