கோவை மாநகராட்சி பொறியாளர் இல்லத்தில் வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி பதுக்கல் - திமுகவினர் வீட்டை முற்றுகை

கோவை மாநகராட்சி பொறியாளர் இல்லத்தில் வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி பதுக்கல் - திமுகவினர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு 4 மணி நேர காலதாமதத்திற்கு  பிறகு வந்த  அதிகாரிகள்.


 


கோவை ஆர்எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் இல்லத்தில், வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏராளமான திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் அங்கு குவிந்தனர்.


இதையடுத்து, காவல்துறை மற்றும் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு அங்கு வந்தனர். மற்றும் ஆர்ஓ சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டும் தான் சோதனை நடத்துவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆர்.ஓ 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 2 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்று 2 மணி  நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பின்பு மாநகராட்சி பொறியாளர் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டனர். 


அங்கு கூடியிருந்த திமுக  தொண்டர்கள் , காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் காத்திருந்தது தான் வீணாகிவிட்டது என்று புலம்பியபடி சென்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி