அரசு மருத்துவமனையின் அவலம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர் இந்த பகுதியானது மிகவும் பின்தங்கிய குறைந்தபட்சம் ஊதியம் பெறும் ஏழை தோட்டத் தொழிலாளர்கள் 80 க்கும் மேல் தின கூலித் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் இவர்கள் மருத்துவ வசதிக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர் இந்நிலையில் நோயாளிகள் முகம் மற்றும் கை கழுவும் இடம் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர்கள் தேங்கியுள்ளது இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மருத்துவமனை என்பது பொதுமக்களுக்கு நோயை போக்கும் இடமாக இருக்க வேண்டும் நோயை உருவாக்கிய இடமாக இருக்கக் கூடாது ஆகவே எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு விரைந்து இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்