30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்கள் நியாயவிலை கடைகள் செயல்படும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 10.01.2024 முதல் 14.01.2024 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேற்படி நாட்களில் இதர பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஜனவரி -2024 மாதத்தில் அதிகமாக அரசு விடுமுறை நாட்கள் இருந்ததாலும், இந்த மாதத்தில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள்  இதுவரை வாங்கமல் அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அறிய வந்துள்ளது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் இதுவரை பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற ஏதுவாக 30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி