Posts

Showing posts from January, 2025

மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு!

Image
 மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்!  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்று ஊடக மைய அனைத்து கலைகளின் கூட்டமைப்பு இசை நாடக நடனக் கலைஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு,  மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட  சங்கம்  மற்றும் பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு   வெல்லம், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் 2025ம் ஆண்டிற்கான நாள்காட்டி அடங்கிய பொங்கல் பரிசுப் பை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்று ஊடகம் மையத்தின்  மாவட்ட தலைவர் திருமாவளவன்  முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கம் மற்றும்  பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில்  நிர்வாகி வள்ளாலகரம் ஆர்.ஆர். பாபு தலைமையில்,  அறக்கட்டளை ஆலோசகர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், சிறப்புரையாற்றினார். ஜி எம். அறக்கட்டளை நிர்வாகி முனைவர். ஜி எம். பத்மா பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்எம்எஸ்.நாராயணன்,  சிவகுமார், முகமது இக்பால், வீரா ஆகியோர்  கலந்து கொண்டு பொங்கல...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள்... குப்பை பிரிக்க தனி மறைவிடம் ஏற்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

Image
மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள்,  நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள்  பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் மயிலாடுதுறை தலைமை மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள  500 கிராம மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. அடிப்படை கட்டமைப்பு மற்றும் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசினால் மேம்படுத்தப்பட்டுள்ளதால்,  குறிப்பாக தாய்மார்களுக்கான தாய்மை, குழந்தை பேரு முன்பின் மருத்துவங்கள், எலும்பு முறிவு, விபத்துக்கள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்களால் சிறப்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மிக அதிக அளவில் உள்ள மருத்துவ கழிவுகள் உருவாகின்றன.  மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு தனியான நிறுவனம்  செயல்பட்டு அதனை சேகரித்து பிரித்து அகற்றி வருகிறார்கள். மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை பிரித்து அகற்றும் பணி  தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் திறந்த நிலையில் நடைபெறுகிறது.இறந்த...

மயக்கமடைந்த பெண்ணை மீட்க கதவை திறந்த போது பாய்ந்த கூட்டம்! திருப்பதியில் 6 பேர் பலியான சோகம்!

Image
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்கள் வாங்கச்சென்ற பக்தர்கள் 6 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பதி கோவிலே உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யக்கூடிய நாட்டிலேயே முக்கியமான கோவிலாகும். திருமலை திருப்பதியில் நடக்கிற பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.  இந்த டோக்கன்கள் 10ந்தேதியான இன்று தான் வழங்கப்பட உள்ளன.  திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்க தயாராக இருந்த நிலையில்,  நேற்று முதலேஅங்கு கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து உள்ளது.  நேற்று மாலை கூட்டம் அதிகமான நிலையில், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயக்கமடைந்து உள்ளார். அவரை மீட்பதற்காக உடனடியாக கதவு திறக்கப்பட்டதும், அந்த கதவுக்குள் நுழைவதற்காக கூட்டம் ஒட்டுமொத்தமாக பாய்ந்தது தான் பெரு நெரிசலுக்கு காரணம். பக்த...

ஆளை மயக்கும் அகஸ்தியர் மலைக்காடு! மலை ஏற்றத்துக்கு நாளை முன்பதிவு தொடக்கம்!

Image
  மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியமான மலையேற்றமாக கருதப்படுவது அகஸ்தியர் மலை மலையேற்றம் ஆகும். தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள களக்காடு முண்டன் துறை பகுதி முக்கிய புலிகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டு வழியில் அகஸ்தியர் மலையேற்றம் தடை செய்யப்பட்டு உள்ளது. இப்போது கேரளத்தின் திருவனந்தபுரம் வழியாக மட்டுமே இந்த மலையேற்றம் செல்ல முடியும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புத மூலிகைகள், ஆளை மயக்கும் வனப்பகுதி, நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காலநிலை, இதையெல்லாம் தாண்டி மலை உச்சியில் இருக்கும் அகஸ்திய மாமுனியை காண ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியா முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கிறார்கள்.  அகஸ்தியர்கூடம் சிகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நுழைவது கேரள வனத் துறையால் தடைசெய்யப்பட்டுள்ளது. வனத் துறையால் வழங்கப்படும் அனுமதியை பெற்று அவர்களுடைய வழிகாட்டுதலுடன் மட்டுமே இந்த மலையேற முடியும்.  அகஸ்தியர் மலையேற்றம் 3 நாள் கொண்ட கடினமான மலைஏற்றம் ஆகும். முதல் நாள் போனாக்காடு வன சோதனைச்சாவடியில் புறப்பட்டு, வனப்பகுதிக்குள் 16 கி.மீ தொலைவில் உள்ள அ...

திருப்பூரில் 3 டன் சர்க்கரை, ஒன்றரை டன் கடலை மாவில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிப்பு

Image
திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 3 டன் சக்கரை, ஒன்றரை டன் கடலை மாவு, பயன்படுத்தி 600 தன்னார்வலர்களுடன் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 10ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா உலகம் முழுவதிலும் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கிட திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில்15வது வருடமாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. லட்டு தயாரிக்கும் பணிக்காக சர்க்கரை 3 டன், கடலை மாவு 1½ டன், 150 டின் எண்ணெய், திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிரசாதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இப்பணிகளில், 600 பே...

திரைப்படமாகிறது வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு!

Image
லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக 'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.  டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.  'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ எம் பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.  'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான ஜனவரி 3 அன்று வெளியிடப்பட்டது. இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனி...

தமிழ்நாட்டு ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள்!...தென்னக ரயில்வே அதிகாரிகளின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டு மக்கள் வேதனை!!

Image
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மேற்கு மண்டல ரயில் பாதையில், ரயில் நிறுத்தங்கள் மற்றும் சீட் ஒதுக்கீட்டில் கேரளாவுக்கு அதிகமாக வழங்கி விட்டு, தமிழ்நாட்டு மக்களை தென்னக ரயில்வே வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நான்கைந்து நிறுத்தங்கள் மட்டும் நிறுத்தப்படும் அதிவேக  எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட, கேரளாவில் 16க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாகவும் இதனால் தமிழக மக்கள் ரயில்களில் இடம் கிடைக்காமல் திண்டாடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.  கிழக்கு கடற்கரையான தமிழ்நாட்டில் இருக்கிற சென்னையில் இருந்து மேற்கு கடற்கரையில் உள்ள கேரள மாநிலத்தின் ஒவ்வொரு சிறிய ஊர்களுக்கும் தென்னக ரயில்வே திட்டமிட்டு ரயில்களை இயக்குகிறது. சென்னையிலிருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் ரயில்கள் அங்கிருந்து  சொரனூர், திரூர், கோழிக்கோடு வழியாக வடக்கு கேரளாவுக்கும், திரிச்சூர், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் வரை தென்கேரளாவுக்கும் இயக்கப்படுகி ன்றன. தமிழ்நாட்டின் சென்னையில் இருந்தும், ஆந்திராவின் திருப்பதியில் இருந்தும், ...

கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை-ஆட்சியர்

Image
டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  டேங்கரில் இருந்து வாயு கசிவதால் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  டேங்கர் லாரியில் இருந்து 4 மணி நேரமாக எரிவாயு கசிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, டேங்கர் லாரியை கிரேன் மூலம் தூக்க முயற்சித்து வருகின்றனர்.

மருத்துவ இன்சூரன்ஸ் சொல்லொண்ணா அநீதி! நடவடிக்கை எடுக்க அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

Image
உலகெங்கும் புதிய புதிய நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைக்கின்றன. நோய்களின் தன்மை அதிகரித்ததால் அதற்கான மருத்துவ செலவும் மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்காக மருத்துவ காப்பீடு அரசு மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அரசின் சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் பெரும் வாய்ப்பு பலருக்கு கிடைக்கப் பெற்று சிகிச்சையும் பெற்று வருகிறார்கள். ஆனால் தனியார் மருத்துவக் காப்பீடு செய்தவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க நிதி கிடைக்காமல் அல்லல்படுவதையும் அலைகழிப்பதையும் அங்கிங்கெனாது எல்லா தனியார் மருத்துவமனைகளிலும் காண முடிகின்றது. குறிப்பாக தனியார் மருத்துவக் காப்பீட்டு ஊழியர்கள் இனிக்க இனிக்க பேசி,  முழு உத்தரவாதம் கொடுத்து, முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்பங்களின் கையெழுத்துக்களை பெற்றுக் கொண்டு, வாழ்வதற்கே கஷ்டப்படுபவர்களிடம் தங்களுடைய வாதத்திறமைகளால் எடுத்துரைத்து, நீங்கள் எங்களிடம் மருத்துவ காப்பீட்டில் இணைகின்ற பொழுது,  அத்தனை மருத்து...

சாதியத்தைத் தகர்க்க குடும்பங்களை ஜனநாயகப்படுத்த வேண்டும்...புத்தாண்டு கலை மாலையில் ஆதவன் தீட்சண்யா கருத்துரை

சாதியின் மிகச்சிறிய அலகுகளாக குடும்பங்கள் இருக்கின்றன. பொதுவெளியில் சாதி அற்றவர்களாக இயங்கப் பழகியிருந்தாலும், குடும்பத்திற்குள் சுத்த சாதிக்காரர்களாக செயல்படுகிறோம். எனவே குடும்பங்களை ஜனநாயகப்படுத்துவது சாதியத்தைத் தகர்க்க அவசியமாகும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து 2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் செவ்வாயன்று “சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்!” என்ற முழக்கத்துடன் கலை மாலை நிகழ்ச்சியை நடத்தினர். உலகப் பிரச்சனையாக மாறும் சாதியம் இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சாதியம் இப்போது உலகப் பிரச்சனையாக மாறி உள்ளது. இந்தியா, தெற்காசியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் சாதியம் பிரச்சனையாக கருதப்படுகிறது. மேல், கீழ் என ஒன்றின் கீழ் ஒன்றாக இருக்கும் சாதி,...

ஹீட்டர் வசதியுடன் ’வெதுவெது’ரயில்... காஷ்மீர் குளிருக்கு கச்சிதமா இறக்குது ரயில்வே... ஸ்ரீநகர் ரயில் பயண நேரம் வெளியீடு!!

Image
இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள காஷ்மீர் மாநிலம் நாட்டின் மிக முக்கிய பிராந்தியமாக உள்ளது. மிகப்பெரிய சுற்றுலாத்தளமாகவும் இருக்கிறது. இமயமலைமேல் இருக்கும் காஷ்மீர் வட்டாரப்பகுதியில் மலைகள், இயற்கை ஆறுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் என கொட்டிக்கிடக்கும் அழகை ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் படையெடுக்கிறார்கள். இது தவிர காஷ்மீரில் இருக்கிற அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கும் லட்சக்கணக்கான மக்கள் யாத்ரிகர்களாக படையெடுக்கிறார்கள்.  காஷ்மீரில் உள்ள சோன்மார்க், குல்மார்க் போன்ற பனிபடர்ந்த மலைகளும், அழகே உருவான தால் ஏரி, டூலிப் கார்டன் சங்கராச்சார்யா மலை உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசிக்கவும், தேனிலவு கொண்டாடவும் இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கிறார்கள்.  இப்படிப்பட்ட காஷ்மீர் பகுதியின் காஷ்மீர் பள்ளத்தாக்கு, மலைமேல் உள்ளதால் இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கப்படாமல் இருந்து வருகிறது. மலை அடிவாரப்பகுதியான ஜம்மு வரைக்கும் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்ட போதும், மலைமேல் இருக...

திருப்பூர் மாவட்ட கபாடிக் கழகத்தின் சார்பில் இளையோர், மூத்தோர் பெண்கள் அணிக்கான பொறுக்குத்தேர்வு

Image
    திருப்பூர் மாவட்ட கபாடிக் கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:   திருப்பூர் மாவட்ட கபாடிக் கழகத்தின் சார்பாக மாவட்ட இளையோர்  சிறுமிகள் அணிக்கான பொறுக்குத் தேர்வு மற்றும் மாவட்ட மூத்தோர் பெண்கள் அணிக்கான பொறுக்குத் தேர்வு வருகிற 03.01-2025ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட கபாடிக் கழக அலுவலக மைதானத்தில் நடைபெறுகிறது.   இதில் மிக இளையோர் பிரிவில் பங்கேற்க  01.03.2009க்குப் பின் பிறந்திருக்க வேண்டும் (16 வயதுக்குள்), எடை: 55 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும். வயது சான்றிதழ் ஆதார் கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.  மூத்தோர் பிரிவுக்கு வயது: வயது வரம்பு இல்லை. எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.  பொறுக்குத் தேர்வுப் போட்டி செயற்கை ஆடுகளத்தில் நடைபெறுவதால் அனைவரும்  மேட் ஷூ அணிந்து வர வேண்டும். கலந்து கொள்ளும் அனைத்து சிறுமிகள் மற்றும் மூத்தோர் பெர்கள் அணிகள் அனைவருக்கும் மதிய உணவும், போக்குவரத்து செலவும் மாவட்ட கபாடிக் கழகத்தின் ...

விபத்தில்லா திருப்பூர்.. போலீசார் கொண்டாடிய புத்தாண்டு!

Image
 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நிலையில் திருப்பூர் மாநகரில் விபத்தில்லா திருப்பூர் என்ற நோக்கத்துடன் போலீசார் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்கள்  2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்து உள்ள நிலையில், திருப்பூர் மாநகரில் புத்தாண்டு இரவு டி ஜே பார்ட்டிகள் மற்றும் மது விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற வகையில் திருப்பூர் மாநகர காவல் துறை மற்றும் விபத்துல்லா திருப்பூர் என்கிற அமைப்பு இணைந்து, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி சிக்னல், வீரபாண்டி பிரிவு உள்பட 14 இடங்களில் பொதுமக்களுக்கு விபத்து இல்லாத திருப்பூர் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் கிரிஸ் யாதவ் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் ஹெல்மெட் அணிவது சீட் பெல்ட் அணிவது மது இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் அணில் குமார், காவல் ஆய்வாளர் கணேஷ் குமார், விபத்தி...