திருப்பத்தூரில் ஆடிப்பெருக்கு விழா... கோவில்களின் சாமிதரிசனம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் ஆடி 18  பெருக்கு விழாவில் முருகர் வள்ளி தெய்வானையுடன் திரு மாங்கல்யம் நடைபெற்றது இந்த விழாவில் தேர் இழுத்து காவடி எடுத்து  மிக விமர்சையாக நடைபெற்றது திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் சின்னூர் பாலமுருகன்கோயில் பசிலிகுட்டை முருகன் கோயில்  வெள்ளைக்கல் குட்டை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகர் ஆலயத்தில்  ஆடி 18 பெருக்கு விழா நடைபெற்றது இந்த விழாவில் முருகர் வள்ளி தெய்வானையுடன் திரு மாங்கல்யம் நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் தேர் இழுத்து பால் காவடி மயில் காவடி எடுத்து அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி பம்பை மேளங்கள் இன்னிசை முழங்க பக்தி பரவசத்துடன் கன்னத்தில் வேலு குத்தி  மொட்டை அடித்து காணிக்கை செலுத்தி  நேர்த்தி  கடனை செலுத்தி திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் முருகர் வள்ளி தெய்வானையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்க பட்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியேறும் அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்