Posts

சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்: எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

Image
திருப்பூர் அருகில் உள்ள 2800 ஆண்டுகள் பழமை வாந்த சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் மார்பளவு தண்ணீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் முழங்கினர். திருப்பூர் அடுத்த சர்க்கார் பெரியபாளையத்தில் 2800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில்,  கோவில் தலைமை அர்ச்சகர் கணேசமூர்த்தி, கரூர் ஆதீனம் குமார் சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில்  ஆறு சிவாச்சாரியார்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ல் அமர்ந்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற யாகத்தில், 501 வகையான மூலிகைகள் இட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தொடந்து சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணேஷ், ராஜேந்திரன், சடையப்பன், ரத்தினமூர்த்தி,  செல்வராஜ், சுப்பிரமணிய குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

திருப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Image
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கு கோறியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும்  தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு திருப்பூரில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க கோரியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும்  தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்,  பாலியல் வன்முறைக்கு நாடு முழுவதும் தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும், இதுவரை தேங்கிய பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும், பெண்களை ஆபாச பொருளாக காட்டும் திரைகாட்சிகளை தடை செய் தனி சட்டமியற்றி தண்டனை கொடுக்க வேண்டும், .ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும், விசாகா தீர்ப்பின்படி மனரீதியான பாலியல் வன்கொடுமையையும் குற்றசெ...

திருப்பூர் : இராணுவ வீரர் மனைவி தற்கொலை

Image
திருப்பூரில் ராணுவ வீரரின் மனைவி தூக்கில் தொங்கிய படி பிணமாக மீட்பு! போலீசார் தீவிர விசாரணை!! திருப்பூர் பாண்டியன் நகரை அடுத்துள்ளது சாய்குமரன்காலனி ஐந்தாவது தெரு. இத்தெருவில் வசித்து வருபவர் நர்மதா தேவி(33). இவரது கணவர் பிரகாஷ் சென்னை ஆவடியில் ராணுவ வீரராக பணியாற்றிவரும் நிலையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரகாஷ் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று காலை நர்மதா தேவியின் குழந்தைகள் படித்துவரும் தனியார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் தினேஷ்குமாரின் செல்போனிற்கு வாட்சாப் மூலமாக நர்மதா தேவி வீட்டில் சேலையை கட்டி தூக்கில் தொங்குவது போல் படத்துடன் தனது குழந்தைகளை நன்றாக பார்த்துகொள்ளவும் என தகவல் அனுப்பி இருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் உடனடியாக நர்மதா தேவியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய படி உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நர்மதா தேவியின் உடலை இறக்கி பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்ததில் ஏற்கன...

திருப்பூர், பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

Image
திருப்பூர் மாநகராட்சி 51-வது வார்டு பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு வாகனத்தை சிறை பிடித்து அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள்  வாக்குவாதம்      திருப்பூர் மாநகராட்சி, 4-வது மண்டலத்திற்குட்பட்ட 51-வது வார்டு, பெரிச்சிபாளையம்த்தில் திரு.வி.க. செல்லும் வழியில் உள்ள சுடுகாடு உள்ளது. அங்கு பெரிச்சிபாளையம், அண்ணமார் காலனி, திரு.வி.க. நகர், வெள்ளியங்காடு, கோபால் நகர், பட்டுக்கோட்டையார் நகர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் வசிப்பவர்கள் அந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் கிடங்கு அமைக்கும் பணிக்காக 5 சென்ட் சுடுகாட்டு ஓடை நிலத்தில் ஒருபகுதியை அதிகாரிகள் தேர்வு செய்து கிடங்கு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க வேண்டாம் என்றும் மாற்று இடம் தேர்வு செய்ய கோரியும், அதிகாரிகளிடம் கோரிக்கை மற்றும் மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து வந்தனர்.     இந்த நி...

திமுக தெருமுனை பிரச்சாரம்

Image
தி.மு.க.,வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 51-வது வார்டு செயலாளர் ஆதவன் முருகேஷ் தலைமையில் நேற்று இரவு தாராபுரம் ரோடு, புதூர்பிரிவு, பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அதில் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், கருவம்பாளையம் பகுதி கழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி, தலைமை கழக பேச்சாளர் போடி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாவட்ட, மாநகர,  51-வது வார்டு நிர்வாகிகள், கலந்து கொண்டனர்

எஸ்.ஆர்., நகரில் குப்பைக்கிடங்கு அமைத்தால் போராட்டம் நடத்துவோம் - மாநகராட்சி அலுவலர்களுடனான அமைதிக்கூட்டதில் பொதுமக்கள் எச்சரிக்கை

Image
திருப்பூர் மாநகராட்சி 60 வது வார்டுக்குட்ப்பட்ட எஸ்.ஆர்., நகர் பகுதியில் குமரன் கல்லூரி பின்புறம் திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் துவக்கினர்.   ஆனால், அந்த பகுதி பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று (வெள்ளி) முருகம்பாளையத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன், தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன், மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி, உதவி பொறியாளர்  திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் ராஜேந்திரன், குடிநீர் ஆய்வாளர்கள் மூர்த்தி, மோகன்ராஜ் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம், 'குப்பைக்கிடங்கால் எந்த இடையூறும் வராது' என கூறி பேசினார்கள். ஆனால் மறுதரப்பில் பொதுமக்கள் அந்த பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தினர். இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, உதவி ஆணையர் கண்ணனுக்கும், பொதுமக...

தமிழ் மொழி சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம்

Image
   தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் சுப்ரீம் மொபைல்ஸ் இணைந்து நடத்திய தமிழ் மொழி சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் திரு.சிவக்குமார் வரவேற்றார்.இப் பயிற்சி வகுப்பில் தமிழில் பிழையின்றி  எழுத, உச்சரிக்க 5-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை சென்னையை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு  பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி. MA Blit, அவர்கள் " விரலசைவு விளையாட்டு" எனும்  எளிய முறையில் தமிழ்ப் பயிற்சி வழங்கினார். இவ் வகுப்பில் எழுத்துக்களின் வடிவம், சொல், நீட்டெழுத்துகள்,துணை  எழுத்துக்கள், கொம்பு எழுத்துக்கள், சுழி எழுத்துக்கள், ஒற்றெழுத்துக்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.. மேலும் ழகரம், றகரம்,  னகரம்  வரும் இடங்கள்,இலக்கணம்,பகுபத உறுப்புகள், சந்திப்பிழை, விகாரம், விகுதிகள், ஐகார குறுக்கம், தினை உறுப்புகள் , வினை, வினைச் சொல்...