திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருப்பூர் காங்கயம் சாலை, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்லித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 47 -வது ஜவஹர்லால் நேரு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, அறிவியல் நாடக விழா மற்றும் கணித கருத்தரங்கு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், இக்கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 படைப்புகளும் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 100 படைப்புகளும் என 158 படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. மேலும், இப்படைப்புகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்ப வரையிலான மாணவர்களுக் கிடையே 1 மாணவர் 1 படைப்பு பிரிவ...