Posts

தூத்துக்குடியில் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் மற்றும் இதர கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜ.பெரியசாமி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  முதல் விற்பனையை துவக்கிவைத்தார். சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இவ்விழாவில், 847 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் காய்கறி தொகுப்பு பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வளர்கள் 5 நபர்களுக்கு  பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில், தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முனைவர். ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி, மாநில பொதுக்குழ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் துறை வளர்ச்சி மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் எம்.பி,அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது .!

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் துறை வளர்ச்சி மாவட்ட  அளவிலான ஆய்வு கூட்டம்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தலைமையில்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் /கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் துவங்க தேவையான அடிப்படை வசதிகள் உள்ளது என்பது குறித்தும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைத்தல் பணிகள், உடன்குடி பவர் பு...

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் பன்வாரிலால் புரோகித்.!

Image
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசும்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது. மேலும் கவர்னரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய இருப்பதால்  ,                புது ஆளுநர் நியமன ஆலோசனையாக கூட இந்த சந்திப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது பிரதமர் நரேந்திரமோடியுடனான இந்த சந்திப்பு திடீர் சந்திப்பாக கூறப்பட்டாலும், ஏற்கனவே முன் அனுமதி பெற்ற பிறகே இந்த சந்திப்பு நடைபெறுவதாக தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என்பது குறி...

டாக்காவில் உள்ள பழரச தொழிற்சாலையில் தீ விபத்து; 52 பேர் பலி.!

Image
டாக்கா-வங்கதேசத்தில் பழரச தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நாராயண்கன்ஜ் மாவட்டம், ரூப்கன்ஜ் நகரில், ஹஷம் புட்ஸ் என்ற பழரச தயாரிப்பு நிறுவனம் உள்ளது. ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் தரை தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள் பீதியில் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். அப்போது பலமான காற்று வீசியதால், தீ, மேல் மாடிகளுக்கும் பரவியது. இதனால் தொழிற்சாலை கட்டடம் முழுதும் கரும் புகை சூழ்ந்தது. மாடிகளில் இருந்த தொழிலாளர்கள் பலர், தப்பிக்க வழி தெரியாமல் தீக்கு இரையாயினர். மேலும் பலர் உயிர் தப்ப, மாடிகளில் இருந்து குதித்தனர்.தகவல் அறிந்து, 18 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து தீயணைப்பு துறை துணை இயக்குனர் அப்துல்லா அல் அரிபின் கூறியதாவது:தொழிற்சாலையில் ஏராளமான ரசாயனங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை இருந்ததால், தீ மளமளவென பரவியுள்ளது. இந்த விபத்தில், 52 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், 44 பேரின் உடல்களை உ...

தூத்துக்குடியில் பெட்ரோல்,டீசல்,கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தொமுச போராட்டம்!

Image
பெட்ரோல்-டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தொமுச பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பர நகரில் தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட தலைவர்  சுசி ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் தர்மன் கண்டன உரையாற்றினார். பொருளாளர் குழந்தைவேலு, துணைத் தலைவர் ராஜாமணி, துணைச் செயலாளர் செல்வபெருமாள், டிப்போ செயலாளர்கள் மரியதாஸ், சந்திரசேகர், கூட்டுறவு தொழிற்சங்க நகர தலைவர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தாளமுத்து நகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது 13 கிலோ கஞ்சா பறிமுதல்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில்  சரண்யா, தலைமைக் காவலர் ஜீசஸ் ரோசாரி,  தனிப்பிரிவு காவலர்  முத்துராஜன், முதல் நிலை காவலர்கள்  திருமணி, சுந்தர்சிங், காவலர்கள்  சிலம்பரசன், மாதவன் மற்றும்  ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள முட்புதரில் இருந்த ...

எங்களைத் தாண்டி தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும் - சீமான் எச்சரிக்கை.!

Image
நடிகர் சூர்யாவை தனி நபர் என நினைத்து பாஜகவினர் அச்சு அச்சுறுத்தவோ மிரட்டவோ முனைந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்  சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவினர் என்னோடு விவாதிக்க தயாரா? ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்த சூர்யாவின் நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்