Posts

கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Image
 திருமண கோலத்தில் மணமேடையில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருக வணங்கினர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கடந்த 30ம் தேதியும், அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் மீனாட்சியம்மன் திக் விஜயம் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 5 டன் வண்ண மலர்களால் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வடக்கு ஆடி- மேல ஆடி வீதி சந்திப்பில் உள்ள அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்...

குட்டிப்பையன் கார் ஓட்டியதால் வந்த வினை... 11 வயது சிறுமி பரிதாப பலி

Image
 15 வயது சிறுவன் தாறுமாறாக கார் ஓட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து சாலையோரம் நடந்து சென்ற 11 வயது சிறுமி பலியானார். தேனி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் 48 இவரது மனைவி கோமதி 40 இவர்களுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர் இவர் திருப்பூர், கோவில் வழி அருகே உள்ள கந்தசாமி தோட்டம் எனும் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  வீட்டின் அருகில் தாராபுரம் முக்கிய சாலையில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். மே 1 ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து உணவகத்திற்கு செல்ல ஆதிநாரயணனின் 3 வது மகள் தீபிகா(11) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் தாறுமாறாக ஓடி சிறுமியின் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதி தலை குப்புற கவிழந்தது.  இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற சிறுவன் அங்கிருந்து தப்பியதாக கூறப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லூர் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரின் பதிவு எண் கொண்டு விசாரித்ததில் ஈஸ்வரன் என்பவரது கார் என தெர...

சித்திரைத் திருவிழாவின் 6ம் நாள்...மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகன ஊர்வலம்

Image
சித்திரைத் திருவிழாவின் 6ம் ளான வெள்ளிக்கிழமை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியம்மனும் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்து சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராட கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்கு பாலூட்ட அம்பிகையோடு சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை தூக்கிய அம்பிகை பொற் கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர்.  கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், உனக்கு பாலூட்டி யது யார்? என கோபித்தார். அப்போது சம்பந்தர், தோடுடைய செவியன், என்ற முதல் தேவாரப் பாடலை பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். அதனை இன்று நாம் தரிசிப்பதாக ஐதீகம். ஞானசம்பந்தரின் தந்தைக்கு காட்சியளித்தது போல், இன்று அம்மனும்  சுவாமியும், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

தாய்லாந்தில் 12 பேரை விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது.

கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 12 பேரை சயனைடு கொடுத்து கொன்ற சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்ற பெண், கடந்த 14-ம் தேதியன்று தனது ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் என்பவருடன் ரட்சபுரி மாகாணத்தில் புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உடன் வந்த ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திடீர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், பிரேத பரிசோதனை நடத்தியதில் உடலில் கொடிய விஷமான சயனைடு கலந்திருப்பது தெரியவந்து. இது தொடர்பாக சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்பவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் கடந்த 2020 முதல் சரத் ரங்சிவுதாபோர்னுடன் தொடர்பில் இருந்த 12 ஆண் நண்பர்கள் இதே போன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பதும் , தற்போது அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதி கேரக்டருக்கு வேலை இல்ல.. கதையையே மாத்திட்டீங்களே மணி சார்... - பொன்னியின் செல்வன் - 2 விமர்சனம்

Image
 ’பொன்னியின் செல்வன்’  இந்த பேரைக்கேட்டாலே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு கூஸ்பம்ப்ஸ் இருக்கும். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிச்சவங்களுக்கு, சொல்லவே வேண்டாம். மனசுலயே கோட்டை கட்டி அதில ராஜ ராஜ சோழனின் சாம்ராஜ்யத்தை ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க.  அதுலயும் அந்த ஆதித்த கரிகாலன் கேரக்டர்., வேற லெவல்.. வரிக்கு வரி வரணனையால்  தூள் கிளப்பி இருப்பார் கல்கி. அப்படி  கொஞ்சம் கற்பனையும், கொஞ்சம் வரலாறும் கலந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவ எடுக்க பலபேரும் ஆசைப்பட்டு, களத்துலயும் இறங்கினாங்க. நம்ம எம்.ஜி.ஆர்., கூட  பொன்னியின் செல்வன் படத்துல நடிச்சாரு. அப்புறம் அவருக்கு ஏக்சிடெண்ட் ஆனதால கிடப்புல போட்டுட்டாங்க. கடைசில ஒரு வழியா மணிரத்னம் இந்த படத்தை இயக்கி முடிச்சுருக்கார். முதல் பாகத்துக்கு பலதரப்பட்ட விமரசங்கள் வந்துச்சு. இன்னிக்கு ரெண்டாம் பாகத்தை ரிலீஸ் பண்ணிருக்காங்க.  படத்தை பார்க்கலாம்னு போனவங்க பலருக்கும் இந்த டிக்கெட் கட்டண வசூல்ல ஒரு பெரிய அலும்பல் ப...

பெரும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பத்ரிநாத் கோவில் தரிசனத்துக்காக திறப்பு... நான்கு புண்ணியதல யாத்திரை முழுமையாக ஆரம்பம்

Image
இந்துக்களின் புண்ணிய தலங்களான நான்கு புண்ணிய தல யாத்திரை இன்று பத்ரிநாத் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் முழுமையாக தொடங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த கோவில்கள் சார்தாம் என்று இந்தியில் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தீபாவளி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் புனித யாத்திரை சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.  25 ஆம் தேதி கேதர்நாத் திறக்கப்பட்டது. 27 ஆம் தேதியான இன்று பத்ரிநாத்தின் கதவுகளும் தரிசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது.  கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் உள்ள பகுதிகள் இமயமலையின் உச்சிப்பகுதியில் இருப்பதால் பெரும் பனி பொழிகிறது. பனித்தூவலுக்கும், குளிருக்கும் மத்தியில் இந்த கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து வருகிறார்கள்.  பத்ரிநாத் கோவில் 108 திவ்யதேசங்களில் 99 வது திவ்யதேசமாகும். இங்கு சாளக்கிரம...

திருப்பூரில் இரண்டாவது சம்பவம்... அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

Image
  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான வடமாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வருவதால் தங்களுக்கு உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். இதனால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வருவதால் மகப்பேறு சிகிச்சைக்கு ஏராளமானவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் ...