Posts

போலீஸ் கமிஷனரிடம், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் மனு

Image
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில் வக்கீல்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூரில் பிரகாஷ் என்பவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடன் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் வரவு- செலவு வைத்திருந்தார். இந்தநிலையில் பிரகாசின் நண்பரான ரமேஷ் கந்துவட் டிக்கு பணம் வாங்கி ஏமாற்றமடைந்தார். ரமேசின் சொத்துகளை சட்டவிரோதமாக பதிவு செய்து தனது பெயரில் பிர காஷ் தரப்பினர் மாற்றம் செய்தனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரகாசின் மேலாளரான சங்கீதராஜன் கொடுத்த புகாரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில் சம்பவத்துக்கு தொடர்பில்லாத முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் பெயரையும் இணைத்து கொடுத்துள்ளார். பொய்யாக புகார் கொடுக்கப்பட்ட குணசேகரன் மற்றும் மற்ற நபர்களின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ 3200க்கு விற்பனை!!

Image
தொடரும் பனிப்பொழிவு காரணமாகவும்,ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில்  மல்லிகை பூ கிலோ 3200க்கு விற்பனை!! திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்  செய்யப்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.இந்நிலையில் தொடர் பனிப்பொழிவு காரணமாகவும் ஆங்கில புத்தாண்டு வருவதை ஒட்டி மல்லிகை,முல்லை பூ விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. பனிப்பொழிலிவு காரணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளது இதனால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது  மேலும் தொடர் முகூர்த்தம்  என்பதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் 2000க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.3200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லை ரூ. 1400க்கும்,பச்சை முல்லை 1400ககும், ஜாதிமல்லி 1000க்கும்,மைசூர் காக்கடா 600,உள்ளூர் காக்கடா 100...

சீமான் கைதை கண்டித்து திருப்பூரில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது

Image
 சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சி தலைவர் சீமான் தலைமையில், தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் சீமான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் தலைமையில் அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு போராட்டம் நடத்தினர். ஆவேசமாக  போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

தீர்த்தக்குடம் எடுத்து ஆடிய திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்!

Image
கோவில் விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பொதுமக்களோடு பொது மக்களாக தீர்த்த குடம் எடுத்து நடனம் ஆடினார். திருப்பூர் அங்கேரி பாளையத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும், இந்த கோவிலில் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம், பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிருந்து தீர்த்தம் எடுத்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர் . ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் திரு.கே.என்.விஜயகுமார் அவர்கள் பக்தர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு ஏற்றார்போல் கையில் வேப்பிலையுடன் நடனமாடி கோவில் வரை தீர்த்தக்குடம் எடுத்து வந்தார். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவருடன் சேர்ந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்பு தீர்த்தங்கள் அனைத்தும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது, ஆண்டுதோறும் ஊர்வலத்தில் விஜயகுமார் எம்எல்ஏ கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆருக்கு மரியாதை

Image
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி திருப்பூர் ஒன்றிய அதிமுக கழகம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37 ஆண்டு நினைவு தினத்தையோட்டி திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஒன்றிய பேரவை தலைவர் எஸ்.எம் பழனிச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர்,வர்த்தக அணி தலைவர் சி.எஸ் சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமணி சிவசாமி சரவணன்,சுகன்யா வடிவேல்,துணைதலைவர் ஜெயக்குமார்,முன்னாள் சொசைட்டி தலைவர்கள் பொண்ணுலிங்கம்,மேக்னம் பழனிச்சாமி,மாவட்ட மீனவர் அணி செயலாளர் சாமி கணேஷ்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் குமாரசாமி,வடிவேல், செல்வராஜ்,முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், காளிமுத்து, கேபிள் ரவி,பொன்னுச்சாமி, உள்ளிட்ட கழ...

பிரியாணி விருந்துடன் பரிசுகள்... கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாரி வழங்கிய இந்திராசுந்தரம்

Image
திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் திருப்பூரில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.  அதன் நிறுவனர் இந்திரா சுந்தரம் தன்னலம் பாராமல், எந்த வித நிதி திரட்டலும் இல்லாமல் சொந்த பணத்தில் பொதுமக்களுக்கு உதவுவதை வாழ்நாள் லடசியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.  அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ் விழாவினை ஏழைகளுக்கு உதவும் விதமாகவும், கோலாகலமாகவும் கொண்டாட முடிவு செய்தார்.  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்ஸோ ஹோம் மற்றும் அன்னால் சிறப்பு பள்ளி இருந்து 80 குழந்தைகள் மற்றும் 50 பெரியவர்களுடான் இந்த பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்தார்.  இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் உடையில் இந்திரா சுந்தரம் பரிசுகள் வழங்கினார்.  காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை பாட்டு நடனம் என குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் இனிப்புகளுடன் பிரியாணி வழங்கப்பட்டது.   இந்நிகழ்கிகளை நிறுவனர் இந்திராசுந்தரம் ஆலோசனையின்படி செயலாளர் கே.ஜி.ராஜாமுகம்மது சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சதீஷ்குமார், யாசின், திவ்யா, விஜி, சித்ரா ஆ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு அந்தியூர் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில் உற்சாக வரவேற்பு

Image
 ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக அந்தியூர் சட்டமன்ற தொகுதி,அந்தியூர் ஒன்றியம் சார்பில் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு காளிங்கராயன் இல்லம் முன்பு 20 பேருந்துகளில் 1000 மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வரவேற்றனர்