உலகில் அருளாட்சி மலர்ந்து அமைதியும் செழிப்பும் உருவாகும் - மகாலட்சுமி சாமிகள் பேச்சு 

திருப்பூர் தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஆடி அமாவாசை குருபூஜை விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த குருபூஜை விழாவில் மகாலட்சுமி சாமிகள் ஆன்மிக கொடி  ஏற்றினார். தொடர்ந்து மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாக பூஜைகள் நடைபெற்றன. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மகாலட்சுமி அம்பாளுக்கு அபிஷேக பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மகாலட்சுமி சாமிக்கு குருபூஜை நடந்தது. இதில் சாமிக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதையடுத்து அன்னதானத்தை மகாலட்சுமி சாமிகள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் மகாலட்சுமி சாமிகள் பேசும்போது, ' உலகில் நடக்கும் அநீதிகள் முடிவுக்கு வந்து கல்கி அவதரித்து விட்டார். தென் தமிழகத்தில் அவதரித்து உள்ளதாக பல ஆன்மிகவாதிகளும், அறிஞர்களும் தெரிவித்து இருக்கின்றனர். இதை அறிந்து அனைவரும் சத்திய வழியில் நடக்க வேண்டும். விரைவில் இந்த உலகில் அருளாட்சி உருவாகி அமைதியும் செழிப்பும் உருவாகும். என்றார்.


 இந்த நிகழ்ச்சியில், அன்னலட்சுமி, சிவகாசி ஐங்கரன், சூர்யபிரபா குப்புசாமி, ஜெயலானி, ஜெகநாதன், பிரபுராம், டேனியல், ஜெயராஜ், விஜயகுமார், பெருமாள் சாமி, சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!