வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்


ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இதில் டி .என்.பாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முகாமில் முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை,அடுக்குமாடி குடியிருப்பு, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், வாணிப்புத்தூர் முன்னாள் கவுன்சிலர் மினியப்பன்,  வாணிப்புத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவணகுமார் சுகாதார மேற்பார்வையாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் மகுடேஸ்வரன், சவேரியார், உட்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்