வேப்பூர் அருகே ஈச்சர் லாரியில் சுமை ஏற்றி வந்த ஓட்டுநருக்கு திடீர் என ஏற்பட்ட வலிப்பு




 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை திருச்சி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார். வேப்பூர் அடுத்த  பில்லூர் கைகாட்டி அருகே லாரி ஓட்டிக் கொண்டு வரும் போது நாராயணன் தனக்கு வலிப்பு வரப் போவதை உணர்ந்து உடனடியாக சாலையோரம் லாரியை நிறுத்தி ஓட்டுநர் இருக்கையில் படுத்துக் கொண்டார்.

 


 

அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் லாரி ஓட்டுநர் வாயில் நுரை தள்ளியவாறு வலிப்பு வந்து அவதிப்பட்டு கொண்டிருப்பதை பார்த்ததும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மயங்கிய நிலையில் இருந்த நாராயணனை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். லாரி ஓட்டுநர் நாராயணன் தனக்கு வலிப்பு வரப்போவதை உணர்ந்து சாலையோரம் லாரியை நிறுத்தியதால் அங்கு ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

 

 



 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி