ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம்  

ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம்  அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் புதுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூட்டை உடைத்து, நேற்றிரவு புகுந்த கொள்ளையர்கள் சாமி கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை தூக்கி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 



இதற்கிடையே இதற்கு அடுத்துள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம், கொண்டத்து காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து, சாமி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை எடுத்துச் சென்று விட்டனா். இதற்கு அடுத்து மலையடிப்புதூர் உள்ள புதுமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டனா். உண்டியலின் பூட்டை உடைக்க முடியாத தால்.அப்படியே விட்டுச் சென்று விட்டனா்.


சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்த கிராமங்களில் ஓரே நாளில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவில் கொள்ளைகளில் வட மாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை செய்து வருகின்றனா்.


 


 


 


.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!