கிருமிநாசினி தெளிக்கும் திமுக எம்.எல்.ஏ., கணேசன்

திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர்  திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான 
சி.வெ கணேசன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்.



கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிகுட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ கணேசன் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்.



இந்நிலையில் பொடையூர், ஆலம்பாடி மற்றும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஊராட்சிகளில் உள்ள கடை பகுதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தேவாலயங்கள், கல்வி மையம், அரசு அலுவலகங்கள்,
  தெரு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான 
சி.வெ கணேசன் தொடர்ச்சியாக டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறார்.


பின்னர் கொரோனா வைரஸ்  நோய்  பற்றிய விழிப்புணர்வும் அனைவரும் மாஸ்க் அணிந்தும் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.



இதில் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் கே.என். டி சுகுணா சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ஆலம்பாடி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி பாண்டியன், தொழிலதிபர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!