பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் வசதி.!


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 100வது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி உட்பட 4 ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது. 

இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும்  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூறாவது ஆண்டை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12 முதல் தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் புதிய ஏடிஎம் மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் சேவை மூலம் வங்கி வசதிகளை 24 மணி நேரமும் மக்கள் பயன் பெரும் பொருட்டு மொத்தம் 1397 ஏடிஎம் / பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் E-Lobby போன்ற வசதிகளை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

நூறாண்டுகளாய் தொடர்ந்து பேராதரவு தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!