தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம்.!


தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 

திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நாளையும், நாளை மறுதினமும், தேனி, நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், காஞ்சிபுரம், வேம்பாக்கம் மற்றும் ஆரணியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்