இரண்டரை வயதில் சூப்பர் ஐ.க்யூ! ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பக்கத்தில் இடம் பெற்ற சுட்டி!


திருப்பூர் விகாசினி மெட்ரிக் பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவரான ஆனந்தபாபுவின் மகன் விவேகானந்தன். இரண்டரை வயதாகும் இந்தச் சுட்டி, பழங்கள், காய்கறிகள், விலங்குகள், பறவைகள், வடிவங்கள், நிறங்கள், பறவைகள் மற்றும் வனவாழ் உயிரினங்களின் சப்தங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களின் பெயர்கள், 

வார நாட்களின் கிழமைப் பெயர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), தேசத்தலைவர்களின் பெயர்கள், 10 தமிழ் பாடல்கள், 10  ஆங்கில பாடல்கள் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்து சட்டென கூறுவாராம்.

அவரது இச்சாதனை ‘இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அவரின் இந்த ஐ.க்யூ திறனைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.  

இந்தச் சுட்டியின் திறனைக் கண்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!