தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை நல முகாம்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் தூத்துக்குடி சென்ட்ரல், மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும்  குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை  முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை  ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் சந்தித்த டாக்டர் நெவில் சாலமன் கூறுகையில் 

இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை குழந்தைகளுக்கு இருதய நோய் பிரச்சினை ஏற்படுகிறது இதனை சரியான நேரத்தில் கவனிக்க வேண்டும் ஏழை எளிய குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அறுவை சிகிச்சை முகாமை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

மாவட்டத்தில் உள்ள இருதய நோய் குழந்தைகள் வந்து சிகிச்சை பெறலாம் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவசமாக சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் இதுவரை 36 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர் இருதய பாதிப்பு குழந்தைகள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் முகாமில் பங்கேற்கலாம் என்று டாக்டர்கள் கூறினர் 

பேட்டியின்போது மரு.ராஜேஷ் திலக், மரு. ஜாஸ்மின்,அப்பல்லோ மருத்துவமனை மேலாளர் ராஜ்குமார்,லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் முருக இசக்கி, தர்மசீலன், தங்கராஜன், ஜோசப் கிருபாகரன் ராஜேஷ் திலக் மருத்துவமனை மேலாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர் 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி