விளாத்திகுளத்தில் பதுக்கி வைத்து புகையிலை விற்பனை - 3 பேர் கைது


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  தலைமையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி விளாத்திகுளம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள செல்வம் (49) என்பவருக்கு சொந்தமான AMS மளிகை கடையை  சோதனை செய்த போது அதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து 

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது  தெரியவந்தது. அவர் வைத்திருந்த பைகளில் ரூபாய் 18,000/- மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும்,

அதனை குழந்தைகளுக்கு விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் சூரிய நாராயண ராஜா (42), மற்றும் ராஜகுரு மகன் கணேசன் (47) ஆகிய 3  எதிரியையும் கைது செய்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி