கோவில்பட்டி அருகே சிறிய ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்.!


கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இளையரசனேந்தல் கொளக்குட்டான்குறிச்சி வழியாக அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் வழக்கம் போல அந்த அரசு பஸ் கழுகுமலைக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு, 

பின்னர் கோவில்பட்டிக்கு கிளம்பியுள்ளது. பஸ்சில் மிக குறைவான பயணிகள் தான் இருந்துள்ளனர். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே வெங்கடசலாபுரம் அருகே பஸ் வந்த போது, மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். 

மூதாட்டி மீது மோதமால் இருக்கும் வகையில் டிரைவர் பஸ்சினை திருப்ப முயன்றுள்ளார். ஆனால் பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த சிறிய ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை..

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!