கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 6 பேர் படுகாயம்.!


திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் சென்ற ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டப சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர் இதில் தன்ராஜ்(35) என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

மேலும் 4 பேர் லேசான காயமடைந்துள்ளனர் விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்