கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் சென்னை வந்தது

 உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் புனித யாத்திரைக்குச் சென்றபோது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன் மற்றும் சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டது.

இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மூவர் உடலும் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினருக்கு ஆறுதல் கூறி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத எடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் வீடுகளுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!