பஸ் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

 மாநகர பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலி, பேருந்து ஓட்டுநர் கைது. 

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி(48), பெயிண்டிங் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே மாநகர பேருந்து நின்று கொண்டிருந்தது.

அதற்கு பின்னால் தடம் எண் 515 மாமல்லபுரத்திலிருந்து, தாம்பரம் வந்துள்ளது, முன்னால் பேருந்து நின்றிருந்ததால் வலது பக்கம் பேருந்தை திரும்பி சாலையில் சென்ற போது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் ரவி பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் தணிகைவேல்(44), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!