விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி

திருப்பூர் விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.மீனா தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா முன்னிலை வகித்தார்.


 கல்வியாளர் வெங்கட் ராஜா, வழக்கறிஞர் மோகன், 3- மன்றத் தலைவர் சி. கோவிந்தசாமி, கவுன்சிலர் ஜெயசுதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் 1 வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல், கதை, கணித விளையாட்டு, சொல்லட்டை மூலம் வாசித்தல் (தமிழ்/ ஆங்கிலம்) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 


விழாவில் எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதயா,ராமன்,  லட்சுமி, தெய்வானை, அரியநாச்சி, மதன், கவிதா, ராசாத்தி, சாந்தி உள்ளிட்ட மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!