50 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா பறிமுதல்... டிரைவரிடம் உனவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை



தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி வழியாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வருவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் அடங்கிய குழு விரைந்து சென்று பான் மசாலா, குட்கா ஏற்றி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் கனேஷ், கூல்லிப், விமல் பான்மசாலா, வி - 1 டோபேக்கோ இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களின் எடை 3250 கிலோ மற்றும் மதிப்பு சுமார் 50,00,000/- ஆகும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களில் இருந்து மூன்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையின் மேல் நடவடிக்கை தொடரப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.கதிரவன்  தெரிவித்தார்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்