சூலூர் காவல் துறையினர் அதிரடி ஐந்து லட்சம் மதிப்புள்ள பான் மசாலா குட்கா பொருட்களை கைப்பற்றினர் இருவர் கைது

சூலூரில் காவல்துறையினர்  சூலூர் பிரிவு அருகே  செங்கோடகவுண்டன்புதூர் பிரிவில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியே வந்த  மினி டெம்போ வேன் (TN 47M 1744) ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலாக்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது மொத்தம் 5480 கிலோ அளவிற்க்கு இருந்தது இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேல் இருக்கும் சூலூர் காவல்துறையினர் உடனடியாக குன்னத்துரை சேர்ந்த  ஓட்டுனர்  முத்துகுமார் (45) மற்றும் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜன்(47) ஆகியோரை கைது செய்து மினி டெம்போ மற்றும் பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள பான் மசாலா குட்கா பொருட்களை சூலூர் காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்ததால்  சூலூர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!