வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிமணி இந்தியா ஆதரவுக்கரம் - யுனிமணி திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.மனோசே பேட்டி.!


 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிமணி இந்தியா ஆதரவுக்கரம் -  யுனிமணி திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.மனோசே பேட்டி.!

இது குறித்து தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுனிமணி இந்தியாவின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் மனோசே கூறுகையில்:-

"வங்கி சாரா நிதி நிறுவனமான யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (NBFC) தமிழ்நாட்டில் தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்நிறுவனம் அதன் CSR முயற்சிகளின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, போர்வைகள் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை விரிவுபடுத்தியது " என கூறினார்.

யுனிமணி இந்தியா தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத் தலைவர் திரு .கார்த்திகேயன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் மனோசே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யுனிமணி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தால் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

"யுனிமணி இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது,சவாலான காலங்களில் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவை வழங்குகிறது, இந்த நேரத்தில் நாங்கள் அவர்களுடன் ஒன்றாக நிற்கிறோம் அவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் எங்கள் CSR செயல்பாடுகள் - குழந்தை கல்வி மற்றும் வசதிகள், ஆரோக்கிம் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கான நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது "என்று யுனிமணி இந்தியாவின் இயக்குனர் மற்றும் CE CA கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி